Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக தலைமையில் மாற்றமா? வந்து விழுந்த கேள்வி! உதயகுமார் கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையிலா? என்று அங்கு மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று திமுக அமைச்சர் ரகுபதி கூறியதற்கு ஆர்பி உதயகுமார் பதில் அளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அதிமுகவை மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து ஆர்பி உதயகுமார் பேசியதாவது:-

Will there be a change in AIADMK leadership after Lok sabha Election 2024 - Udayakumar replies

"ஒரு திருவிழா வரும் போது சாமியும் தேரில் சுற்றி வருவாங்க.. பஞ்சு மிட்டாய் விற்கிறவர்களும் சுற்றி வருவார்கள். அதேபோல் கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் என எல்லா ஆட்டமும் அங்கே இருக்கும். இந்த ஆட்டம் எல்லாம் அங்கே பொழுதுபோக்கு தான். அங்கே வரும் மக்களுக்கு அங்கே இருக்கிற தெய்வம் தான் வாழவைக்கும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு தெய்வங்களான எம்ஜிஆர், ஜெயலலிதா. அவர்களின் மறுவடிவமான இன்று பிறந்தநாள் காணும் புரட்சி தமிழன் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொண்டு நான்கரை ஆண்டுகள் சிறப்பாக புனித அரசியலை செய்து வருகிறார். ஆகவே பொழுது போக்கிற்கு வந்தவர்களை பற்றி நாம் பேசி நம்ம பொழுதை வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்". இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து லோக்சபா தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக தலைமையில் மாற்றம் வரும் என்று அமைச்சர் ரகுபதி கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஆர் பி உதயகுமார், "அவரே அதிமுக தானே.." என்று சிரித்தபடி பதில் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைச்சர் ரகுபதி, அதிமுகவை கடுமையாக சாடினார். ரகுபதி கூறுகையில், "எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடுவது பற்றி கேட்கிறீர்கள். எதிர்க்கட்சி தலைவர் எதிர்கட்சி தலைவராக பணியாற்ற வேண்டும். அப்போது தான் சரியான எதிர்கட்சியாக இருக்கும். அதனை விட்டு வேறுவிதமான விமர்சனங்களை வைக்கும் போது அவரது பதவிக்கே ஒரு ஆபத்து ஏற்பட்டு விடும்.

ஆனால் அவரது பிறந்தநாளில் அவரது பதவிக்கு ஆபத்து என்று சொல்வது அழகல்ல. அவா் பல்லாண்டு வாழ திமுக வாழ்த்தும். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையிலா? என்று அங்கு மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனை நாங்கள் செய்யமாட்டோம். ஆனால் பாஜக செய்யும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+