2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி
சென்னை: வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்விக்கு, "ஜூன் 18-ஆம் தேதிக்குப் பிறகு தெரியும்" என்று அமைச்சர் வன்னியரசு கூறினார். முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று வன்னியரசு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார்.

சட்டப்பேரவை நடைமுறைகள், ஆளுநர் உரை மீதான விவாதங்கள், சட்டரீதியான செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், இந்த முன்னெடுப்பை மேற்கொண்ட சபாநாயகர், அவை முன்னவர் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். முதல் நாள் பயிற்சி சிறப்பாக நடைபெற்ற நிலையில், இரண்டாவது நாள் பயிற்சியும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் மனைப்பட்டா தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டதாகவும், பல்வேறு துறைகளில் தலித் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 2500 மகளிர் உரிமை தொகை உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்விக்கு, "ஜூன் 18-ஆம் தேதிக்குப் பிறகு தெரியும்" என்று பதிலளித்தார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண்கள்' சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், குற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் அச்சப்படவோ, பதற்றப்படவோ தேவையில்லை என்றும், காவல்துறை கூடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் கூறினார்.
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று வன்னியரசு தெரிவித்தார். மேலும், விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே குட்கா வழக்கு நிலுவையில் இருப்பது தொடர்பான கேள்விக்கும் அவர் கருத்து தெரிவிக்க மறுத்தார்.
-
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்!














Click it and Unblock the Notifications