நாளை திமுக அரசு...கேட்காமலே உதவும்...ஸ்டாலின் உறுதி
சென்னை : நாளை அமையும் திமுக அரசு கேட்காமலே உதவும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திருவண்ணாமலையில் தனது பிரசார பயணத்தை நேற்று துவக்கிய ஸ்டாலின், மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகள் பற்றி கேட்டு, மனுக்களை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் இன்று (30-01-2021), திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , தனது முகநூல் பக்கத்தில், அடுத்து திமுக ஆட்சி அமையும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட முகநூல் பதிவில், திருவண்ணாமலையில் தாயை இழந்த பெண் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் மனு கொடுத்திருந்தார். உடனடியாக தி.மு.க. உதவும் என உறுதியளித்தேன். பதறிய அரசு 2 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறது.
தி.மு.க.விடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது! நாளை அமையும் தி.மு.க. அரசு கேட்காமலும் உதவும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.