ஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே? பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்
பெருங்குடி பெண் கொலையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: குப்பை கிடங்கில் பெண்ணின் ஒரு கை, 2 கால்கள் மட்டுமே சிக்கிய நிலையில், இன்னும் உடலை கண்டுபிடிக்க முடியாமலும், கொலையுண்டவர் யார் என தெரியாமலும் போலீசார் திணறி வருகிறார்கள்.
பாதி சென்னையின் ஒட்டுமொத்த குப்பைகள் கொட்டப்படும் இடம் பெருங்குடி. இங்குள்ள பெரிய குப்பை கிடங்கில் வழக்கமாக சில பெண்களும், இளைஞர்களும் பிளாஸ்டிக்கை சேகரிப்பார்கள். அப்படித்தான் நேற்று முன்தினமும் குப்பையை கிளறி கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பை கிடக்கவும், அதனை எடுத்து பிரித்த பார்த்தபோதுதான், அதில் ஒரு கை, 2 கால்கள் என பார்சல் செய்யப்பட்டு இருந்தது. அந்த கை ஒரு பெண்ணின் வலது கை எனவும், தங்கத்தில் ஒரு வளையல் போட்டிருந்தார் எனவும் தெரியவந்தது.

கைரேகை
மேலும் அந்த கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் என 2 டிசைன்களில் பச்சை குத்தப் பட்டுள்ளது. கால்களில் வெறும் மெட்டி மட்டும் அணிந்திருக்கிறார். அதனால் பெண்ணின் ஒரே ஒரு கையை வைத்து, அதன் ரேகைகளை எடுத்து விசாரணை நடக்கிறது.

3 தனிப்படைகள்
ஆனால் 2 நாட்களாக தேடி வந்தும் இன்னும் பெண்ணின் உடலை போலீசாரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதனால் கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் தீவிரமாக விசாரணையில் இறங்கி உள்ளனர்.

காணாமல் போனவர்கள்
ஒரு பக்கம் அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொரு பக்கம் உடல்பாகங்களுடன் வந்த குப்பைகள் கொண்டு வரப்பட்ட பகுதிகளில் காணாமல் போன பெண்கள் யாராவது இருக்கிறார்களா என்றும் விசாரணை நடக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சமீபத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

குழப்பம் நீடிப்பு
கொலை செய்யப்பட்டவர் துணை நடிகையாக இருக்கலாம் அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் கண்டிப்பாக வசதியான வீட்டு பெண்தான் என்று போலீசார் சொல்கிறார்கள். எனினும் பெருங்குடி பெண் கொலையுண்ட விவகாரத்தில் மர்மமும், குழப்பமும் நீடித்து போலீசாரை திணறடித்து வருகிறது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications