Tambaram: தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்.. அடுத்து நடந்த தரமான சம்பவம்
சென்னை: தாம்பரம் பேருந்து நிலையில் ஷேர் ஆட்டோவுக்காக நின்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு 50 வயது நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இளைஞரை கன்னத்தில் பளார் என அறைந்தார். தொடர்ந்து தப்பி செல்ல முயன்ற அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முடிச்சூர் செல்வதற்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அவரது தாயும் உடன் இருந்ததால் ஷேர் ஆட்டோவில் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
அப்போது 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த இளம்பெண்ணின் அருகே வந்தார். அப்போது இளம்பெண்ணை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அந்த நபரை கன்னத்தில் பளார்.. பளார் என மாறி மாறி அறைந்தார். மேலும் அவரது சட்டையை பிடித்து எங்கே தப்பி செல்ல பார்க்கிறாய்.. என பிடித்து வைத்தார்.
ஏன் இப்படி செய்தாய் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த பயணிகளும் என்ன நடந்தது என கூற தொடர்ந்து இளம்பெண் நடந்ததை கூறினார். மேலும் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.
மது போதையில் செய்துவிட்டதாக மன்னிப்பு
எனினும் அங்கு வந்த பெண் போலீசாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், உளுந்தூர் பேட்டையை சேர்ந்தவர் என்பதும், தாம்பரம் அருகே அறை எடுத்து தங்கி வசித்து வருகிறாராம். சமையல் வேலை செய்து வருகிறாராம்.
போதையில் தெரியாமல் செய்துவிட்டதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதன் பின்னர் 'இனி இது போல் செய்ய மாட்டேன் என சொல்லி இளம்பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தனர்'. பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications