Tambaram: தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்.. அடுத்து நடந்த தரமான சம்பவம்
சென்னை: தாம்பரம் பேருந்து நிலையில் ஷேர் ஆட்டோவுக்காக நின்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு 50 வயது நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இளைஞரை கன்னத்தில் பளார் என அறைந்தார். தொடர்ந்து தப்பி செல்ல முயன்ற அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முடிச்சூர் செல்வதற்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அவரது தாயும் உடன் இருந்ததால் ஷேர் ஆட்டோவில் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
அப்போது 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த இளம்பெண்ணின் அருகே வந்தார். அப்போது இளம்பெண்ணை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அந்த நபரை கன்னத்தில் பளார்.. பளார் என மாறி மாறி அறைந்தார். மேலும் அவரது சட்டையை பிடித்து எங்கே தப்பி செல்ல பார்க்கிறாய்.. என பிடித்து வைத்தார்.
ஏன் இப்படி செய்தாய் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த பயணிகளும் என்ன நடந்தது என கூற தொடர்ந்து இளம்பெண் நடந்ததை கூறினார். மேலும் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.
மது போதையில் செய்துவிட்டதாக மன்னிப்பு
எனினும் அங்கு வந்த பெண் போலீசாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், உளுந்தூர் பேட்டையை சேர்ந்தவர் என்பதும், தாம்பரம் அருகே அறை எடுத்து தங்கி வசித்து வருகிறாராம். சமையல் வேலை செய்து வருகிறாராம்.
போதையில் தெரியாமல் செய்துவிட்டதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதன் பின்னர் 'இனி இது போல் செய்ய மாட்டேன் என சொல்லி இளம்பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தனர்'. பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications