மகனை பிரிந்த மருமகள்.. திரும்ப வராததால் வேதனை.. தூக்கில் தொங்கினார் மாமியார்!
மருமகள் பிரிந்து போனதால் மாமியார் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: மருமகள் தற்கொலை என்றே படித்து பழக்கப்பட்ட நமக்கு மாமியார் தற்கொலை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த தம்பதி ராஜ் - அந்தோணி ஜெரால்டு கருணா. இவர்களுக்கு ஜெயந்தன் என்ற மகன் உள்ளார்.
அவருக்கு திருமணமாகி சுபாஷினி என்ற மருமகள் உள்ளார். எல்லோரும் ஒரே குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

திரும்பி வரவில்லை
இந்நிலையில், ஜெயந்தனுக்கும் சுபாஷினிக்கும் பிரச்சனை ஏற்பட்டு, தகராறாக முற்றிவிட்டது. அவர்களுக்குள் என்ன தரகாறு என தெரியவில்லை. இதனால் புருஷனுடன் கோபித்து கொண்டு, சுபாஷினி தன் அம்மா வீட்டுக்கு போய் விட்டார்.

மனவருத்தம்
கோபத்தில் போனவர் வந்துவிடுவார் என்று பார்த்தால் திரும்பி வரவே இல்லை.இதனால் புருஷனை விட அதிகமாக பாதிக்கப்பட்டது மாமியார் அந்தோணி ஜெரால்டுதான். இன்னைக்கோ, நாளைக்கு மருமகள் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசியில் அளவுக்கு அதிகமான மன வருத்தத்திற்கு ஆளாகி விட்டார் மாமியார்.

ஒதுங்கியே இருந்தார்
அப்போதிருந்து யாருடனும் சரியாக பேசாமல் ஒதுங்கியே இருந்தார். எப்போதுமே எதையோ பறிகொடுத்தது போலவே இருந்தார். வீட்டிலிருப்பவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் பழைய நிலைக்கு அவரை கொண்டுவரவே முடியவில்லை.

தூக்கில் தொங்கினார்
இந்நிலையில் மருமகள் பிரிந்து போன வேதனை தாங்காமல் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மருமகளுக்காக மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications