அலறிய சென்னை.. சைதாபேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணை வெட்டிய மர்ம நபர்! ரத்த வெள்ளத்தில் மீட்பு
சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வந்த ராஜேஸ்வரி எப்ன்ற பெண்ணை மர்ம நபர் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையின் மிகவும் பரபரப்பான ரயில்நிலையங்களுல் ஒன்று சைதாப்பேட்டை. நாளொன்று பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் இந்த ரயில் நிலையத்தில் அதிர வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருபவர் ராஜேஸ்வரி.

இவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து கீழே இறங்கி வந்து இருக்கிறார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் ராஜேஸ்வரி அருகே கத்தியுடன் சென்று உள்ளார். கண் இமைக்கும் நேரத்திற்கு ராஜேஸ்வரியை கத்தியால் வெட்டிய அந்த நபர் உடனே அங்கு வந்த ரயிலில் ஏறி தப்பிச் சென்று உள்ளார்.
இதனால் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஸ்வரி மீட்கப்பட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து உள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து தப்பிச் சென்ற குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி இருக்கிறார். கத்தியால் குத்திவிட்டு தப்பிய மர்ம நபர் யார்? ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? முன்விரோதம் காரணமாக வெட்டினாரா? கொலை செய்யும் முயற்சியில் தாக்குதல் நடத்தினாரா? என்ற கேள்விகளுடன் போலீசார் விசாரணையில் இறங்கி இருக்கிறார்.

சென்னையின் முக்கிய பகுதியான சைதாப்பேட்டையில் உள்ள ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இதேபோல் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அதேபோல் கடந்த ஆண்டு பெண் ஒருவர் பரங்கி மலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னையில் இன்று மற்றுமொரு முக்கிய ரயில் நிலையமான சைதாப்பேட்டையில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications