தாயாய்.. மனைவியாய்.. மகளாய்..! மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு என்ன தெரியுமா?
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் முக்கியத்துவத்தை போற்றவும், அவர்களின் பிரதிநிதித்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாகவே மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுவது ஏன்? எந்த ஆண்டில் இருந்து தொடங்குகிறது என்ற வரலாற்றை இங்கே பார்க்கலாம்.
தாயாக, மனைவியாக, மகளாக என ஒரு சமூகத்தில் நீக்கமற நிறைந்திருப்பது பெண்கள்தான். ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றாலும் சரி.. ஒரு குடும்பத்தில் தலைமுறையே உயர வேண்டும் என்றாலும் பெண்களின் கல்வி அவசியமானது என்று மூத்தோர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்றாலும் கூட இன்னும் கூட பெண்களுக்கான பாகுபாடு நீடிக்கத்தான் செய்கிறது.

மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுவது ஏன்?
சமூகத்தில் ஆண்களை விட பெண்களை மட்டம் தட்டி பார்க்கும் மனநிலை இன்னும் முழுமையாக மறையாத நிலையே இன்றைய நவீன உலகத்திலும் நீடிக்கிறது. பெண்களின் முக்கியத்துவத்தை போற்றவும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுவது ஏன்? எந்த ஆண்டில் இருந்து தொடங்குகிறது என்ற வரலாற்றை இங்கே பார்க்கலாம்.
1975 ஆம் ஆண்டு, முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனாலும் இதற்கான விதையானது 1850 களிலேயே ஆரம்பித்தது. பெண்களுக்கு ஊதியத்தில் பாகுபாடு காட்டப்பட்டதற்கு எதிராக கொதித்தெழுந்த பெண்கள் 1910 ஆம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் உரிமை மாநாட்டை நடத்தினர். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் மிகப்பெரும் புரட்சி
மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் மிக முக்கியமானவர் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின். பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கிளாரா.. ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என நினைத்தார். இதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டாலும், பொதுவான ஒரு நாளை கொண்டாடும் கனவு நிறைவேறவில்லை. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நாளில் கொண்டாடிக்கொண்டு இருந்தன.
இந்த சமயத்தில் 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் மிகப்பெரும் புரட்சியை முன்னெடுத்தார்கள். இதனால் அந்த நாட்டின் ஆட்சியே கவிழ்ந்தது. 1920ல் சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் பெண்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தொடங்கிய நாள் ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர்படி பிப்ரவரி 23 ஞாயிற்றுக்கிழமையாகும். ஆனாலும் கிரிகோரியனின் காலண்டர்படி மார்ச் 8 ஆம் தேதியாக இருந்தது. இந்த நாளே தற்போது மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications