'மதசார்பின்மை' வார்த்தை அரசியல் சாசனத்தில் இல்லை.. 25 ஆண்டுகளுக்கு பிறகுதான்! ஆளுநர் ரவி பரபர பேச்சு
சென்னை: சுதந்திரம் அடைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் மதச்சார்பின்மை என்ற வார்த்தை இந்திய நாட்டில் சொருகப்பட்டது எனவும் சிலரை திருப்திப்படுத்தவே மதச்சார்பின்மை சேர்க்கப்படது எனவும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார்.
தமிழக ஆளுநராக இருக்கும் ஆர் என் ரவி கூறும் கருத்துக்கள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது. தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆளுநர் ரவி, ஆளும் திமுகவை சீண்டும் விதமாக அடிக்கடி கருத்துக்களை கூறி வருகிறார். அண்மையில் கூட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி, சனாதனத்தை டெங்குவுடன் ஒப்பிட்டு பேசியவர்கள் தற்போது அமைதியாகிவிட்டார்கள் என்று பேசினார்.

அமைச்சர் உதயநிதியை பேசியதை மறைமுகமாக குறிப்பிட்டு ஆளுநர் ரவி இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,மதசார்பின்மை என்ற வார்த்தை இந்திய நாட்டில் சொருகப்பட்டது என்று கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி மலையில் அமைந்துள்ள ஹிந்து தர்ம வித்யா பீடத்தின் 41வது சமய வகுப்பு மாநாடு மற்றும் 35வது பட்டமளிப்பு விழா திருவட்டாரில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி இவ்வாறு கூறியுள்ளார். ஆளுநர் ரவி மேலும் கூறியதாவது:- சனாதன தர்மத்தை பலவீனபடுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. பல கடவுள்களை வழிபடுகிறோம். ஆனால், அதை வைத்து சிலர் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். வேறு எந்த மதமும் சொல்ல முடியாத, அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கிறார் என்ற கருத்தை நாம் கூறுகிறோம். சனாதன தர்மத்தை பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும்.
அனைவருக்கும் விளக்கம் கூறும் அளவிற்கு தயராக இருப்பது அவசியம். குறிப்பாக இளைய சமுதாயத்தினர் இது பற்றி விளக்கம் அளிக்க தயராக இருப்பது அவசியம். சுதந்திரத்தின்போது பொருளாதாரத்தில் உலக அளவில் 6-வது இடத்தில் நமது நாடு இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் சனாதான ஆட்சியில் பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம்.
இன்னும் சிறிது காலத்தில் மூன்றாவது இடத்துக்கு வர இருக்கிறோம். ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு பல ஏமாற்று வேலைகள் இங்கு நடந்தன. தவறான கோட்பாடுகள் நமக்கு சொல்லப்பட்டன. அதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், மதசார்பின்மை ஆகும்.. மதசார்பின்மை என்ற வார்த்தை அரசியல் சாசனத்தில் இடம்பெறவே இல்லை. ஆனால், சுதந்திரம் அடைந்து 25 ஆண்டுகளுக்கு கழித்துதான், மதச்சார்பின்மை என்ற வார்த்தை இந்திய நாட்டில் சொருகப்பட்டது.
மதச்சார்பின்மை என்பது நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தர்மமாக இருக்கவேண்டும். புதிதாக வந்த சிலர் நான் சொல்வது மட்டும் தான் சரி, நான் வணங்குவது மட்டும்தான் கடவுள் என்று சொல்கிறார்கள். அதைத்தான் மதசார்பின்மை என அவர்கள் சொல்கிறார்கள். அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
-
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
சட்டசபை தேர்தலில் வைகோ போட்டி? எந்த தொகுதி தெரியுமா? தீப்பிடிக்க போகும் தீப்பெட்டி! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications