தலித்துகளின் மீதான தீண்டாமை மனோபாவத்தை உரக்க சொன்னவருக்கு விருது! யார் இந்த எழுத்தாளர் பாமா?
சென்னை: இந்த ஆண்டிற்கான வேர்ச்சொல் தலித் இலக்கிய விருதை எழுத்தாளர் பாமாவுக்கு நீலம் பண்பாட்டு மையம் அளித்தது.
வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது ஆண்டுதோறும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த நிகழ்வு இரு நாட்களாக நடந்தது.

ராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ்ப் பேரவையில் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் இந்த விழா நடந்தது. இதில் இந்த ஆண்டு வேர்ச்சொல் தலித் இயக்கிய விருது எழுத்தாளர் பாமாவுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த விருதுடன் ரூ 1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 6 அமர்வுகள் இடம் பெற்றன. இதில் தமிழ் இலக்கியத்தின் திசை வழி என்ற எழுத்தாளர் பாமாவின் நூல் வெளியீடு நடந்தது. மேலும் அவர் குறித்த ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் இலக்கிய புத்தக கண்காட்சியும் நடந்தது. வேர்சொல் தலித் இலக்கிய விருதை பெற்ற பாமா தலித் இலக்கியங்களை படைப்பவர். இவர் 1992 ஆம் ஆண்டு எழுதிய கருக்கு எனும் புதினம் புகழ் பெற்றது. இது தலித் மக்கள் மொழியை பயன்படுத்தி எழுதிய. ஆசிரியையாக பணிபுரிந்தவர் பாமா. இந்த புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழகத்தில் அறுபதுகளில் பிறந்து இன்று ஆசிரியப் பணியாற்றும் பாமா தலித்திய நாவலாசிரியர்களில் முக்கியமானவர். இவர் 1994 ஆம் ஆண்டு சங்கதி என்ற நாவலையும் படைத்தார். இது மிகச் சிறந்த தலித்திய நாவலாகும். இவரின் முதல் நாவலான கருக்கு தமிழின் முதல் தலித் இலக்கியத் தன்வரலாற்று நாவல் என அனைவராலும் பாராட்டப்பட்டது.
கிறிஸ்துவ துறவியாக தென் மாவட்ட கிராமம் ஒன்றில் தான் பெர்ற அனுபவங்களையே இவர் எழுத்தாக எழுதியுள்ளார். தலித்துகள் மீது மாற்று ஜாதியினரிடம் இருக்கும் தீண்டாமை மனோபாவம், கிராம நிகழ்ச்சிகளிலும், ஊர் திருவிழாக்களிலும் பங்கு கொள்ள முடியாது தனித்து விடப்பட்ட சோகங்கள், பள்ளி, கல்லூரிகளில் தலித் மாணவர்கள் எதிர்கொண்ட அவமானங்கள் ஆகியவற்றை பற்றி இவர் எழுதியுள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு வன்மம், மனுசி ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். அது போல் கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் என்ற 3 சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். வருகை தரு இலக்கிய ஆளுமை என்ற தமிழ்ப் பல்கலைக்கழகம் விருது அளித்தது.
சென்னையில் புதுபட்டியில் 1958 ஆம் ஆண்டு ஃபாஸ்டினா மேரி பாத்திமா ராணியாக பிறந்தார். இவர் பிறகுதான் தனது பெயரை பாமா என மாற்றி கொண்டார். இவர் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவருக்கு வயது 66. இவருடைய தந்தை சூசைராஜ், ராணுவத்தில் பணிபுரிந்தார். இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ராஜ் கவுதமனின் சகோதரி. இவரும் வேர்ச்சொல் தலித் இலக்கிய விருதை பெற்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications