ட்விட்டரை திறந்தால் அதிர்ச்சி.. "என்ன இப்படி ஆகிடுச்சு.." அமெரிக்கா டூ இந்தியா.. அலறிய நெட்டிசன்கள்
சியாட்டில்: இன்று மாலை உலகெங்கும் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளம் முடங்கியது. இதனால் உலகெங்கும் உள்ள ட்விட்டர் யூசர்கள் தளத்தைப் பயன்படுத்த முடியாமல் அவதியடைந்தனர். இந்தியாவிலும் பெரும்பாலான யூசர்களுக்கு ட்விட்டர் தளம் முடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகெங்கும் அதிக யூசர்களை கொண்ட சமூக வலைத்தளங்களில் ஒன்று ட்விட்டர். இந்த ட்விட்டர் தளத்தைக் கடந்த 2022ம் ஆண்டு பிரபலத் தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியிருந்தார். அதன் பிறகு எலான் மஸ்க் ட்விட்டரை எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து நடத்தி வருகிறார். மேலும், எக்ஸ் தளத்தில் அவர் ஏகப்பட்ட மாற்றங்களையும் கொண்டு வந்தார்.

இதில் சில மாற்றங்கள் நெட்டிசன்களையே வரவேற்பைப் பெற்றாலும், பெரும்பாலான மாற்றங்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது. இருந்த போதிலும், எலான் மஸ்க் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. ப்ளூ டிக்கிற்கு கட்டணம், க்ராக் ஏஐ என பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
இதற்கிடையே 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளம் உலகெங்கும் இன்று முடங்கியது. சற்று நேரத்திற்கு முன்பு தான் உலகெங்கும் இந்த தளம் முடங்கியது. இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான இந்திய யூசர்களால் எக்ஸ் தளத்தைப் பயன்படுத்த முடியவில்லை. சுமார் 30,000க்கும் அதிகமானோர் தங்களால் எக்ஸ் தளத்தைப் பயன்படுத்த முடியவில்லை எனப் புகாரளித்துள்ளனர்.
அமெரிக்காவிலும் 23,210க்கும் அதிகமான இதே புகாரை முன்வைத்துள்ளனர். எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கிய பிறகு எக்ஸ் தளம் நிலையாகவே இருந்துள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற மற்ற சமூக வலைத்தளங்களுடன் ஒப்பிடுகையில், எக்ஸ் அரிதாகவே செயலிழந்தது. இருப்பினும், இன்றைய தினம் எக்ஸ் தளம் முடங்கிய சூழலில், இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications