மத்திய கைலாஷ் அடையாறு பாலத்தில் பயமின்றி செல்லலாம்.. தமிழக அரசு விளக்கம்
சென்னை: அடையாறு பகுதியிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கிண்டி பகுதியில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்களும் மற்றும் ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து கிண்டிக்கு செல்லும் வாகனங்களும் தங்குதடையின்றிச் செல்வதற்கு ஏதுவாக சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.61 கோடியில் 'எல்' வடிவ மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 16-ந்தேதி திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள பகுதி என்றால் அது ஓஎம்ஆர் சாலை தான். மத்திய கைலாஷ் சந்திப்பில் தொடங்கி நாவலூர் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ளன, மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் அலுவலங்களும் அமைந்துள்ளன. இதனால் எப்போதுமே நெரிசல் அதிகமாக இருக்கும். இந்த மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏற்படும் நெரிசலை கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதேநேரம் மெட்ரோ பணிகள் நடக்கும் காரணத்தால் பெரிய அளவில் நிலத்தை கட்டுப்பாட்டில் எடுக்க அரசால் முடியவில்லை.

இந்த சூழலில் மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.61 கோடியில் கட்டப்பட்டுள்ள 'எல்' வடிவ மேம்பால பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது. இந்த மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அடையாறு பகுதியிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கிண்டி பகுதியில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்களும் மற்றும் ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து கிண்டிக்கு செல்லும் வாகனங்களும் தங்குதடையின்றிச் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒருவழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 652 மீட்டர் ஆகும் (அணுகு சாலை உட்பட).
சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ்காந்தி சாலைக்குப் பிரிந்து செல்லும் இடத்தில் பாலம் வளைவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவானது 30 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வளைவுப் பகுதியில் பாலத்தின் அகலம் கூடுதல் ஆக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வளைவுப் பகுதியில் எவ்வித பயமுமின்றி பயணிக்கலாம். இருப்பினும், பாலத்தின் மீதான பயணத்திற்கு வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வேக கட்டுப்பாட்டிற்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச்சுவரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 'எல்' வடிவ இருவழிச்சாலை மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) திறந்து வைக்க உள்ளார்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications