Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல ஆயிரம் ஃபைன்! உங்க கிட்ட ஆதார், பான் கார்டு இருக்கா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதார் கார்டு - பான் கார்டை இணைக்காதவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

நிரந்தர வங்கி எண்தான் பான் எண் ஆகும். நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

You may have to pay hefty amount of fines while filing ITR if Pan Number is not linked with Aadhaar

முதலில் 1 வருடம் அவகாசம். பின்னர் கூடுதலாக 6 மாதம் அவகாசம். அதன்பின் கடந்த மார்ச் வரை 500 ரூபாய் அபாரதத்துடன் அவகாசம், பின்னர் ஜூன் இறுதிவரை 1000 ரூபாய் அபாரதத்துடன் அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் கடந்த மாதம் உறுதியோடு முடிந்துவிட்டது.

பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று அனைத்துடனும் இந்த எண் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில்தான் ஆதார் கார்டு - பான் கார்டை இணைக்காதவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பான் அட்டை ஆதார் அட்டையை இணைக்கத்தவர்களுக்கு உங்கள் பான் செயலற்றதாகி விடும். அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.

அதன்படி இந்த மாதம் இறுதிவரை வருமான வரித்துறை ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய முடியும். இதற்கு பான் அட்டை அவசியம். ஆனால் ஆதாருடன் பான் அட்டையை இணைக்கத்தவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. இதனால் அவர்கள் பான் அட்டையை ஆக்டிவேட் செய்ய மனு கொடுக்க வேண்டும். இன்று மனு கொடுத்தால் கூட பான் அட்டை ஆக்டிவேட் ஆக ஒரு மாதம் வரை எடுக்கும்.

இதற்கு ஒரு அபராதம் கட்ட வேண்டும். பான் அட்டை ஆக்டிவேட் ஆகும் முன் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடியும். அதன்பின் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திதான் வருமான வரி தாக்கல் செய்ய முடியும். இதனால் மொத்தமாக இரண்டு அபராதம் கட்ட வேண்டி இருக்கும். மொத்த அபராதம் 6 ஆயிரத்திற்கும் மேல் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

பாதிப்புகள்: பான் அட்டை ஆதார் அட்டையை இணைக்கத்தவர்களுக்கு உங்கள் பான் செயலற்றதாகி விடும். அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.

இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படுமா, வங்கி கணக்கு முடங்குமா என்று இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக ஆர்பிஐ விரைவில் விளக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வட்டார தகவல்களின்படி இனிமேல் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது.

ஆதார் கார்ட் தற்போது நாட்டில் முக்கியமான அடைய அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்ட் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்ட் முக்கியம் ஆகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+