இனி கிடைக்க மாட்டேன்.. கான்பரன்ஸ் காலில் சொல்லி விட்டு மாயமான பெண்.. அதிர்ச்சியில் சென்னை குடும்பம்
சென்னை: சென்னையை சேர்ந்த இளம் பெண்ணை காணவில்லை என அவரது குடும்பத்தார், பதைபதைப்புடன் தேடி வருகிறார்கள்.
வட பழனியைச் சேர்ந்தவர் அம்பிகா. இவருக்கு திருமணாகி 4 வயதில் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் உள்ளது.

இந்த நிலையில்தான், அம்பிகாவுக்கும், அவர் கணவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன்பிறகு கடந்த 12ம் தேதி முதல், திடீரென, அம்பிகா மாயமாகிவிட்டார்.
இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக உதவி கேட்டிருந்தார் அம்பிகாவின், சகோதரர், சரவணன். இதையடுத்து 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட் சரவணனை தொடர்பு கொண்டு பேசியது. அவர் கூறியதாவது:
அம்பிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கடந்த 16ம் தேதி மதியம் 12.30 மணிவாக்கில், எங்க அம்மா மற்றும், அம்பிகாவின் கணவர் இருவருக்கும், கான்பரன்ஸ் கால் செய்துள்ளார் என் சகோதரி. அப்போது, "இனிமே கிடைக்கமாட்டேன்.. தேடாதீர்கள்" அப்படீன்னு சொல்லிட்டு போனை கட் செய்துவிட்டார். பிறகு போன் ஆன் செய்யப்படவேயில்ல.

இதுவரை, அம்பிகா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆனால் நான் அவருக்கு இ-மெயில் அனுப்பினேன். அதை அவர் ரிசீவ் செய்துள்ளார். அது சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியில் ஐபி அட்ரஸ் காட்டுகிறது. ஆனாலும் எங்களால கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசில் இதுபற்றி புகார் கொடுத்திருக்கிறேன். அவர்கள் 48 மணி நேரம் கால அவகாசம் கேட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
My sister is missing from yesterday. If you find her please contact +91-6382367007
— aswath saru (@aswath2saru) March 17, 2020
Please share and help finding my sister please. #missing #corona #chennai #bangalore #sister pic.twitter.com/T2WjptxcfZ
ஐபி அட்ரஸ், புகைப்படம் உள்ளிட்ட சகல வசதிகள் இருந்தும், காவல்துறை இன்னும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது. இந்த விஷயத்தில் காவல்துறையின் வேகம் அவசியம். ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக புகழப்படும், தமிழக காவல்துறை, விரைவில் அந்த பெண்ணை கண்டுபிடித்து, அவரது குடும்பத்தோடு சேர்த்து வைக்க வேண்டும். இதுதான் அந்த குடும்பத்திற்கு குறிப்பாக, 4 வயது குழந்தையின் முகத்தில் புன்னகையை மீட்டுத் தரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உங்களில் யாருக்காவது, இந்த பெண் பற்றி தெரியவந்தால், 6382367007 என்ற சரவணனின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications