தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த இளம் பெண்.. காளிபிளவரில் மர்மம்.. மதிப்பு ரூ. 6 கோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண், தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்தார். தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்பிய வடமாநில பெண்ணை பார்ததும் மோப்ப நாய் சைகையால் காட்டிக்கொடுத்தது. அந்த பெண்ணை சோதித்த போது, அவர் கொண்டு வந்த காலிபிளவர் மற்றும் மஸ்ரூம்களுக்கு இடையே இருந்தைதை பார்த்து அதிகாரிகள் ஆடிப்போனார்கள். அதன் மதிப்பு பல கோடியாகும்.

சென்னை மீனாம்பாக்கத்தில் அண்ணா சர்வதேச விமான நிலையம் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று. ஒரு மணி நேரத்தில் 50க்கு மேற்பட்ட விமானங்கள் வந்து இறங்கி செல்கின்றன.. இங்கு உலகின் பல்வேறு நாட்டு விமானங்கள் வந்து செல்வதால் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை எல்லா கண்டத்திற்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான வசதி உள்ளது. சென்னையில் இருந்து, துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கின்றன.

airport thailand

அந்த வகையில், சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று வழக்கம் போல் தீவிரமாக பரிசோதித்தனர்.

அதில் வடமாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கிற்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்திருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் நிறுத்தி தீவிரமாக விசாரித்தனர். அவர், தனது உடைமைகளில் காலிபிளவர் மற்றும் மஸ்ரூம்கள் இருப்பதாக அவரது உடைமைகளை மோப்பம் பிடித்த சுங்கத்துறை மோப்ப நாய், தரையில் அமர்ந்தபடி, தனது கால் நகங்களால் தரையை கீறி சைகை காட்டியது. அவ்வாறு சைகை காட்டினால், அந்த உடைமையில் சந்தேகப்பொருள் இருக்கிறது என்று அர்த்தம்.

சுங்க இலாகா அதிகாரிகள் பெண் பயணியின் உடைமையை திறந்து பரிசோதித்தார்கள். அதில் 14 பார்சல்கள் இருந்துள்ளது. அவற்றை பிரித்து பார்த்தபோது காலிபிளவர் மற்றும் மஸ்ரூம்களுக்கு இடையே உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அந்த பார்சல்களில் சுமார் 6 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.6 கோடியாகும்.

கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், வடமாநில இளம்பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். மேலும் விசாரணையில் அந்த பெண், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர். எனவே உயர்ரக கஞ்சாவை சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தார்? என்று கைதான இளம்பெண்ணிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+