இன்னும் எத்தனை பேர் வேணும்.. ஏன் துரோகம் பண்றே.. ஆஷாவின் ஆவேசம்.. எரிக்கப்பட்ட கான்ஸ்டபிள்!

போலீஸ்காரரை தீ வைத்து எரிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆஷாவின் ஆவேசம்.. எரிக்கப்பட்ட கான்ஸ்டபிள்!

    சென்னை: "உனக்கு இன்னும் எத்தனை பொண்ணுங்க வேணும்.. ஏன் எனக்கு துரோகம் செய்றே" என்று சண்டை போட்ட கள்ளக்காதலி ஆஷா, தூங்கி கொண்டிருந்த போலீஸ்காரரை உயிருடன் எரித்து தீ வைத்தார்.. இதில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

    சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். 30 வயதாகிறது. இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2-ம் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயா. ஸ்கூல் படிக்கும்போதே ஜெயாவை காதலித்தவர்.. பின்னாளில் அவரையே கல்யாணம் செய்து கொண்டார். 7, 5 வயதுகளில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். ஆனால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரை விட்டு பிரிந்துள்ளார். கோர்ட்டில் விவகாரத்தும் கேட்டுள்ளனர். இப்போதைக்கு மகள் அப்பாவுடனும், மகன் அம்மாவுடனும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    தனிக்குடித்தனம்

    தனிக்குடித்தனம்

    இந்த சமயத்தில், வெங்கடேசுக்கு ஆஷா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஆஷா ஏற்கனவே கல்யாணமாகி பிள்ளைகளை பெற்றவர். அவரும் அவர் குடும்பத்தை விட்டுவிட்டு, வெங்கடேசுடன் ஒரே வீட்டில் தம்பதி போல வாழ்ந்து வந்துள்ளனர்.

    ஆத்திரம்

    ஆத்திரம்

    ஆனால், வெங்கடேசுக்கு ஆஷா, தவிர வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது.. இதனால் கள்ளக்காதலர்களுக்கு தினமும் தகராறு வந்துள்ளது. வழக்கம்போல் இரவு சம்பவத்தன்றும் சண்டை வந்துள்ளது.. ஒரு கட்டத்தில் வெங்கடேஷன் தூங்க போய்விட்டார்... ஆனால் ஆஷாவுக்கு ஆத்திரம் தீரவே இல்லை.

    பாத்ரூம்

    பாத்ரூம்

    அதனால் நடுராத்திரி 1 மணிக்கு ஆஷா, பெட்ரோலை எடுத்து வந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேஷ் மீது ஊற்றி, தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் உடம்பெல்லாம் தீ பரவியதால், வெங்கடேஷ் அலறி அடித்து கொண்டு, பாத்ரூமுக்குள் ஓடி, தண்ணீரை பக்கெட் பக்கெட்டாக எடுத்து உடம்பில் ஊற்றிக் கொண்டார். தீயை அணைப்பதற்குள் அக்கம்பக்கத்தினர் விரைந்து ஓடிவந்து வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    வேறு ஒரு பெண்

    வேறு ஒரு பெண்

    இதையடுத்து, வெங்கடேசன் புகார் அளிக்கவும், திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஷாவை கைது செய்தனர். ஏற்கனவே மனைவி உள்ளார், அவர் பிரிந்து சென்றதும் என்னுடன் உறவு.. என்னை தவிர வேறு பெண்களுடனும் உறவு என்பதால் என்னால் தாங்க முடியவில்லை.. அதனால்தான் உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்றேன் என ஆஷா சொல்லவும், போலீசார் புழலில் அடைத்தனர்.

    மரணம்

    மரணம்

    இதனிடையே உடம்பெல்லாம் தீயில் கருகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த வெங்கடேசன் இன்று உயிரிழந்தார். சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+