சென்னை அம்பத்தூர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. 5 இளம்பெண்கள் மீட்பு.. உரிமையாளர் கைது
சென்னை: சென்னை அம்பத்தூரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீஸார் 5 இளம்பெண்களை மீட்டனர்.
அம்பத்தூர், ஒரகடம், வடிவேல் முதலி தெருவில் உள்ளது ஆயுர்வேத மசாஜ் சென்டர். இந்த சென்டரை சென்னை, வண்ணாரப்பேட்டை, வஉசி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் நடத்தி வருகிறார்.

இங்கு இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடைபெற்று வருவது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அங்கு பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய 5 இளம்பெண்களை போலீஸார் மீட்டனர்.
அவர்கள் அனைவரையும் மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். அதன்பிறகு புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அந்த இளைஞரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications