Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரிக்கெட் விளையாடும்போது திடீரென சரிந்து விழுந்த இளைஞர்.. மாரடைப்பால் பலி! சென்னையில் பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னை அடுத்துள்ள மாதவரம் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென உயிரிழந்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த நவீன உலகில் எல்லாமே இணையம் என்றாகிவிட்டது. ஷாப்பிங் முதல் அனைத்துமே உட்கார்ந்த இடத்திலேயே நடக்கிறது. அனைத்து பொருட்களும் நமது வீடுகளுக்கே தேடி வந்துவிடுகிறது.

Youth playing cricket passed away due to silent Heart attack in Chennai

இதனால் நாம் வெளியே செல்ல வேண்டிய தேவையே கணிசமாகக் குறைந்துவிட்டது. இதனால் நாம் ஒரே இடத்தில் உட்கார்ந்தே நீண்ட காலம் வேலை செய்யும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா காலம்: அதிலும் கொரோனா காலத்தில் ஓர்க் பர்ம் ஹோம் வந்தவுடன் வேலைக்கு ஆபீஸ் கூட செல்ல தேவையில்லை என்ற சூழல் உருவானது. இப்படி, மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் நம் பல வித உடல் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறோம். இதன் காரணமாக முன்பு அரிதாக ஏற்பட்ட நோய்ப் பாதிப்புகளும் கூட அதிகமாக ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

இதனால் மாரடைப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது. வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட மாரடைப்பு இப்போது இளைஞர்கள் மத்தியிலும் அதிகமாக ஏற்படுகிறது. இது சில நேரங்களில் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. அதிலும் கொரோனா காலத்திற்குப் பிறகு நல்ல உடல்நிலையில் இருக்கும் இளைஞர்கள் கூடப் பட்டு பட்டென சரிந்து உயிரிழக்கும் சம்பவங்களும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தலைநகர் சென்னை: அதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் தான் இப்போது சென்னையில் நடந்துள்ளது. சென்னை அடுத்துள்ள மாதவரம் அம்பேத்கர் நகர் ஜிஎன்டி சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஸ்ரீராம்.. 30 வயதான அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவர் அவ்வப்போது தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் மாலை இவர் தன் நண்பர்களுடன் மாதவரத்தில் உள்ள வி.எஸ்.மணி நகர் மைதானத்தில், கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்படவே அங்கேயே அவர் மயங்கி விழுந்தார். இதனால் பதறிய அவரது அவரது நண்பர்கள் ஆம்புலன்சுக்கு கால் செய்துள்ளனர். உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இருப்பினும், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்ரீராம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். திடீர் மாரடைப்பால் ஸ்ரீராம் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இது குறித்து மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீர் மாரடைப்பு: கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இதுபோன்ற திடீர் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இப்போது இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்திலும் கூட கேள்வி எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்கும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வு நமக்குத் தேவை. மூச்சு விடுவதில் சிரமம், தலைச் சுற்றல் மற்றும் மயக்கம், மார்பில் அழுத்தம் அல்லது லைட்டான, கைகள், மார்பு, கழுத்து, தோள்கள் வலி உணர்வு, வியர்வை மற்றும் குமட்டல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். அப்போது உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+