செல்போனுக்காக இளைஞர் கழுத்து நெரித்து கொலை! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை: சென்னையில் குடிபோதையில் செல்போனுக்காக இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு, வஉசி நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் அஸ்மத் பாட்ஷா (38). இவர் கடந்த 1 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் மதுபோதையில் பயணித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த ரயிலில் மெரினா கடற்கரையில் குதிரை சவாரி ஓட்டும் சுரேஷ் (38), சீனிவாசன் (52) ஆகிய இருவரும் பயணம் செய்தனர். அப்போது அஸ்மத் பாட்ஷா மதுபாட்டில்களை வைத்திருப்பதை பார்த்ததும் சுரேஷ், சீனிவாசன் ஆகியோர் அவருடன் நன்றாக பேசியுள்ளனர்.
இதையடுத்து 3 பேரும் சென்னை கடற்கரை- பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதில் சுரேஷும் சீனிவாசனும் சேர்ந்து அஸ்மத் பாட்ஷாவை சரமாரியாக தாக்கி டவலால் அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இதையடுத்து அவரது செல்போனை திருடிக் கொண்டு அதை ரயில் நிலையத்திலேயே விற்றுவிட்டு அவர்கள் இருவரும் தப்பிவிட்டனர்.
தகவலறிந்து எழும்பூர் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அவர்கள் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சீனிவாசனை போலீஸார் தேடி வருகிறார்கள். செல்போனுக்காக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications