Zomato: எரிபொருள் விலை உயர்வு! ஜொமாட்டோ உணவு டெலிவரி கட்டணமும் உயர்ந்தது! ஸ்விக்கி?
சென்னை: எரிபொருள் விலை உயர்வு எதிரொலியாக ஜொமாட்டோ உணவு டெலிவரி கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் உணவை ஆன்லைனில் ஆர்டர் போட்டு சாப்பிடுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அது போல் போட்டி நிறுவனமான ஸ்விக்கியும் பிளாட்பாஃர்ம் கட்டணத்தை 12.50 லிருந்து ரூ 14.90 காசுகளாக உயர்த்தியுள்ளது. இதனால் ஜொமாட்டோவில் இனி ஒவ்வொரு முறையும் உணவை ஆர்டர் செய்தால் கூடுதல் கட்டணம் ரூ 2.40 செலுத்த வேண்டும். இதனால் ஆர்டர் போட்டு உணவு சாப்பிடுவோர் கூடுதல் பணத்தை செலவிட வேண்டும்.

ஏற்கெனவே ஹோட்டலில் போய் உணவு வாங்குவதற்கும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கும் ரூ 20 முதல் ரூ 80 வரை அதிகரித்தே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த டெலிவரி கட்டணம் உயர்வால் உணவு கட்டணம், வரி , அது, இது என நாம் செலுத்த வேண்டிய கட்டணங்கள் அதிகரிக்கும்.
இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றமில்லாமல், பிரீமியம் ரக பவர் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ. 2-க்கும் அதிகமாக உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு பிபிசிஎல் நிறுவனத்தின் 'ஸ்பீட்', ஹெச்பிசிஎல்-இன் 'பவர்' மற்றும் ஐஓசிஎல்-இன் 'XP95' போன்ற உயர்செயல்திறன் கொண்ட எரிபொருள் வகைகளுக்குப் பொருந்தும். இவற்றின் விலைகள் லிட்டருக்கு ரூ. 2.09 முதல் ரூ. 2.35 வரை அதிகரித்துள்ளன. வழக்கமான பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மத்திய கிழக்கு நெருக்கடியால் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மையின் மத்தியில் இந்த விலை உயர்வு வந்துள்ளது. எனினும், பரந்த விலை உயர்விலிருந்து சில்லறை நுகர்வோரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹெச்பிசிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா ஆகிய இரு தரப்பிலிருந்தும் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி உள்ளன.
பூமியின் 20% எரிசக்தி விநியோகம் கடந்து செல்லும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள தடங்கல்கள், உலகளாவிய எண்ணெய் விலைகளில் கூர்மையான அதிகரிப்பைத் தூண்டியுள்ளன. சப்ளை ஆபத்துக்களை சந்தைகள் கணிக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு டாலர் 100 ஐ தாண்டி, அதிகபட்சமாக டாலர் 120 ஐ நெருங்கியுள்ளன.
இந்தியா, கச்சா எண்ணெய்க்கு இறக்குமதியை பெரிதும் சார்ந்திருப்பதால், இந்த நிலைமைக்கு கணிசமான பாதிப்பை எதிர்கொள்கிறது. நாட்டின் கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 85-90% வெளிநாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இதில் சுமார் 40-50% ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுப்பப்படுகிறது.
இந்த முக்கிய வழியில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், கப்பல் போக்குவரத்து செலவுகள், காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் ஒட்டுமொத்த இறக்குமதி கட்டணங்கள் அதிகரிக்கும். மேலும், விநியோக பற்றாக்குறை அபாயத்தையும் உயர்த்தும். கச்சா எண்ணெய் விலையில் டாலர் 10 உயர்வு கூட இந்தியாவின் இறக்குமதியைக் கணிசமாக அதிகரித்து, பணவீக்க அழுத்தங்களை சேர்க்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ரூபாயின் மீதான அழுத்தம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றம் மற்றும் எரிபொருள், எல்பிஜி செலவுகள் அதிகரிப்பது குறித்த கவலைகள் என இதன் தாக்கம் ஏற்கனவே வெளிப்படையாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications