சபரிமலை ஐயப்பன் கோயிலில் 61 போலீஸாருக்கு கொரோனா பாதிப்பு
கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டதன் பிறகு டிசம்பர் மாதம் மட்டும் 61 போலீஸார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடைத் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பக்தர்கள் வருகையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 7 நாட்களில் கேரள கோயிலில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இதுவரை வந்த 16205 பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்துள்ளார்கள். அவர்களில் 13,632 பேர் பக்தர்கள் ஆவர். கோயிலில் உள்ள மொத்தம் 2,573 பேரில் 146 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதிலும் போலீஸ்காரர்கள் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பம்மையில் 47 பம்பாவில் 11 பேர் சன்னிதானத்திலும் 3 பேர் நிலக்கல்லிலும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். தேவஸ்தானத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் நிலக்கல்லிலும், 8 பேர் பம்பாவிலும் 49 பேர் சன்னிதானத்திலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications