கொரோனா என்றால் என்ன? எட்டிக்கூட பார்க்கவில்லை.. இயல்பாக இருக்கும் லட்சத்தீவு.. ஆச்சர்யமான உண்மை

Subscribe to Oneindia Tamil

கொச்சி: உலகமே கொரோனா தொற்றால் நிலைகுலைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. கொரோனா ஒட்டுமொத்தமாக மக்களின் சந்தோஷத்தை பறித்து வருகிறது. ஆனால் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் நம் இந்தியாவில் லட்சத்தீவில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அங்கு மக்கள் இயல்பாக வாழ்கிறார்கள். எந்த லாக்டவுனை இதுவரை அவர்கள் சந்திக்கவில்லை.

இத்தனைக்கும் அங்கு யாரும் முககவசம் அணிவது இல்லை.சானிடிசர்கள் இல்லை, மற்றும் கொரோனாவின் பல விதிமுறைகள் நடைமுறையில் இல்லை. திருமணங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் உட்பட ஒவ்வொரு சமூக நடவடிக்கைகளும் வழக்கம் போல் தொடர்கின்றன. இதற்கு காரணம் அரபிக்கடலில் உள்ள லட்சதீவுக்கு நம் மக்கள் எளிதில் நுழைவதைத் தடுக்கும் வகையில் கடுமையான நிலைப்பாடு எடுக்கப்பட்டது.

கேரளாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதுமே, லட்சத்தீவில் தனிமைப்படுத்துதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. கேரளாவின் கொச்சியில் ஏழு நாள் கட்டாய தனிமைப்படுத்தல், கொரோனா நெகட்டிவ் என்றால் மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகளால் இதுவரை லட்சத்தீவில் ஒரு கொரோனா பாதிப்பு கூட ஏற்படவில்லை.

மத்திய அரசு

மத்திய அரசு

நாட்டின் மிகச்சிறிய யூனியன் பிரதேசம் என்றால் அது லட்சத்தீவு தான். 32 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் தான் லட்சத்தீவு. இந்த பகுதி 32 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. அனைத்து தீவுகளும் கேரளாவின் கடற்கரை நகரமான கொச்சியிலிருந்து 220 முதல் 440 கி.மீ தூரத்தில் உள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி, இது 64,000 மக்கள் உள்ளனர். லட்சத்தீவு யூனியன் பிரதேசம் என்பதால் அந்த தீவு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது.

கொரோனா இல்லை

கொரோனா இல்லை

லட்சத்தீவுக்கு லோக்சபா எம்பி மட்டும் உள்ளார். அவர் பெயர் பி பி முகமது பைசலின். கொரோனா தொற்று இந்த ஆண்டு பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படாதது குறித்து குறித்து பைசலின் கூறுகையில், "நாங்கள் எடுத்த முன்மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இதுவரை லட்சத்தீவிலிருந்து ஒரு கொரோனா வைரஸ் கேஸ் கூட பதிவாகவில்ல.

கட்டுப்பாடுகள் இல்லை

கட்டுப்பாடுகள் இல்லை

சாமானியராக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் அல்லது மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் - அவர்கள் கொச்சியில் கட்டாயமாக ஏழு நாள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும், கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வழியாக யூனியன் பிரதேசத்திற்கு போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்பதால், தீவுகளில் உள்ள மக்களுக்கு கோவிட் -19 கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

பள்ளிகள் செயல்படுகின்றன

பள்ளிகள் செயல்படுகின்றன

முககவசம் யாரும் போடவில்லை சாணிடைசர்கள் இல்லை, ஏனெனில் இது ஒரு பசுமையான பகுதி(கொரோனா இல்லாத பகுதி). நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் ஒரே இடம் லட்சத்தீவுதான். செப்டம்பர் 21ம் தேதி பிரதமர் (நரேந்திர மோடி) பள்ளிகளை திறக்க அனுமதித்துள்ளார். மதங்கள் மற்றும் பிற திருமணங்கள் உட்பட அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல் நடைபெறுகின்றன. இங்கே எல்லாம் இயல்பாக நடக்கிறது.

தனிமைப்படுத்துதல்

தனிமைப்படுத்துதல்

எப்படி சாத்தியம்: கேரளாவில் முதல் கொரோனா கேஸ் அறிவிப்பு வெளியான உடனேயே ஜனவரி மாதத்தில், உள்ளூர் நிர்வாகம் கடுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. முதல் கவலையே சுற்றுலாப் பயணிகளின் வருகையை நிறுத்துவதாக இருந்தது. சர்வதேச மற்றும் உள்நாட்டு. பயணிகளை 2019 மாதத்தில், நாங்கள் நிறுத்தினோம்.நிர்வாகம் பின்னர் ஒவ்வொரு தீவுகளுக்கும் நுழைவு அனுமதி தேவை என்று அறிவித்தது. யாரையும் கொச்சியிலிருந்து தலைநகர் காவரட்டிக்கு மட்டுமே அணுக அனுமதித்தது. நுழைவு அனுமதி வழங்குவதைக் குறைப்பதன் மூலம், தீவு அல்லாதவர்கள் லட்சத்தீவுக்கு வருவதை நிர்வாகதினர் கட்டுப்படுத்தினர்.

நிர்வாகம் செலவு

நிர்வாகம் செலவு

நாட்டின் பிற பகுதிகளிலும் வெளிநாட்டிலும் பணிபுரியும் லட்சத்தீவுவாசிகளின் நுழைவுக்காக, லட்சத்தீவில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சிகிச்சை நோக்கத்திற்காக கொச்சிக்கு செல்வோர் என ஒரு சிஸ்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி , லட்சத்தீவுக்கு வர விரும்புவோர் கொச்சியில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும், அதனுடன் தொடர்புடைய செலவை நிர்வாகம் ஏற்க வேண்டும். கொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட தீவுவாசிகளின் மாதிரிகளை முறையாக பரிசோதிப்பதை உறுதி செய்வதற்காக, நிர்வாகம் கலாமாசேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒரு சோதனை மையத்தை வழங்கி இருந்தது.

சோதனைக்கு உட்படுத்தினேன்

சோதனைக்கு உட்படுத்தினேன்

எதிர்மறையை சோதித்தவர்கள் லட்சத்தீவுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் குறிப்பிட்ட தீவை அடைந்ததும், மீண்டும் அவர்கள் ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்கள். அதை மருத்துவ மற்றும் காவல் துறைகள் கண்டிப்பாக கண்காணித்து வந்தார்கள். தொற்றுநோய்களின்போது டெல்லிக்கு நான் மூன்று முறை பயணம் செய்துள்ளேன், தீவுகளுக்குத் திரும்புவதற்கு முன், கொச்சியில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது உட்பட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றினேன். கொரோனா நெகட்டிவ் என்று வந்த பிறகு நான் மீண்டும் லட்சத்தீவுக்கு வந்தேன், மீண்டும் அங்கு நான் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டேன்.

நெகட்டிவ் வந்தால்

நெகட்டிவ் வந்தால்

லட்சத்தீவுக்கு வரும் முன்பு கொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டபோது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் கொச்சியில் உள்ள நிர்வாகத்தின் சிறப்பு வசதிக்கு மாற்றப்பட்டார்கள். அங்கு அவர்கள் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்கள். 10 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் சோதிக்கப்பட்டார்கள் அவர்களுக்கு சோதனையில் நெகட்டிவ் வந்தால் இன்னும் 14 நாட்கள் நிர்வாகத்தின் வசதியின் தங்கினார்கள். மீண்டும் ஒரு சோதனை நடத்திய பின்னரே தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்

அரும்பாடுபட்டவர்

அரும்பாடுபட்டவர்

லட்சத்தீவை கொரோனா இல்லாத பகுதியாக இருப்பதற்கு லட்சத்தீவின் மறைந்த நிர்வாகி தினேஷ்வர் சர்மா எடுத்த நடவடிக்கைகளே காரணம். எங்கள் தீவை எல்லா வழிகளிலும் கொரோனா இல்லாத பசுமைப்பகுதியை மாற்ற அவர் மிகவும் பாடுபட்டார். இதற்காக அவர் எந்த எல்லைக்கும் சென்று கடுமையாக உழைத்தார். அவர் ஒரு நல்ல மனிதர். காலம் அவரை கொண்டு சென்றுவிட்டது. கடுமையான நுரையீரல் பாதிப்பால் டிசம்பர் 4 ஆம் தேதி சென்னையில் உள்ள மருத்துவமனையில் சர்மா இறந்தார்" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+