தாலி கயிற்றின் நிறம் கூட மாறலை.. உடல் முழுவதும் மஞ்சள் பூசி.. இளம்பெண்ணை கொன்று தற்கொலை என நாடகம்
கோவை: கோவையில் காதலித்து திருமணம் செய்த பெண்ணை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை ஆலாந்துறை அருகே உள்ள மத்துவராயபுரம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சஞ்சய் (20). இவர் பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் பி.காம் சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தன்னுடன் படித்து வந்த செல்வபுரம் பகுதியை சேர்ந்த ரமணி (20) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததை அடுத்து எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து கடந்த மே மாதம் 6ஆம் தேதி சஞ்சயும் ரமணியும் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணியில் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மத்துவராயபுரம் குறிஞ்சி நகரில் உள்ள சஞ்சயின் அப்பா அம்மா இவர்களது காதலை ஏற்றதால் புதுமண தம்பதி இருவரும் அங்கு தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி ரமணி சாணி பவுடர் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக ஆலாந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரமணி ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து காருண்யா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரமணியின் தந்தை கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் ஆர்டிஓ விசாரணைக்கு பின்னர் ரமணியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ரமணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சஞ்சயின் குடும்பத்தினர் அவரை கொன்றதாகவும் ரமணியின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து போலீஸார் ரமணியின் கணவர் சஞ்சய், மாமனார் லட்சுமணன், மாமியார் பக்ருநிஷா ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மூன்று பேருமே முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்தனர். இதனால் காவல் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் விசாரணையில் சஞ்சய் அடிக்கடி செல்போனில் அவருடன் படித்த கல்லூரி மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதை ரமணி தட்டிகேட்டு இனி அந்த பெண்ணுடன் பேச வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடந்த 29ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோபத்தில் சஞ்சய், ரமணியை அடித்து கழுத்து பிடித்துள்ளார். மேலும் கீழே தள்ளி அந்த பெண்ணின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்ததாகவும் தெரிகிறது. இதனால் ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சஞ்சய் தனது தாய், தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனால் கொலை மறைப்பதற்காக அந்த பெண்ணின் உடலில் இருந்த ஆடைகளை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்து ஆடைகளை அகற்றி சாணிப்பவுடரை குடித்து இறந்தது போல் செட்டப் செய்துள்ளனர். அக்கம்பக்கத்தினரை நம்ப வைக்க புளியை கரைத்து ஊற்றி, உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போல் நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து சஞ்சய் தனது மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். 20 நாட்களில் ஆசையாக திருமணம் செய்து கொண்ட காதலியை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம்












Click it and Unblock the Notifications