"நீல" நிறமா மாறப் போகுது நம்ம கோவை.. மக்களுக்கு குஷியோ குஷி.. உக்கடம், காந்திபுரம் இனி ஜொலிக்கும்

Subscribe to Oneindia Tamil

கோவை: சென்னை, மதுரையைத் தொடர்ந்து அல்ட்ரா மாடல் ஸ்டைல் கொண்ட 25 புதிய லோ ப்ளோர் பஸ் எனும் தாழ்தளப் பேருந்துகள் கோவையில் விரைவில் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு இருக்கை வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் என அனைத்து வசதிகளையும் கொண்டதாக கோவை மாவட்டம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வசதிகள் சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் உள்ளன.

Floor bus coimbatore

கோவையில் பொதுமக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் பேருந்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும், வார இறுதி நாள்களிலும், தொடர் விடுமுறை நாள்களிலும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் முன்பைவிட அதிக அளவில் அரசு விரைவுப் பேருந்துகளை பயன்படுத்துவதால், பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக அரசு புதிய பேருந்துகள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஏராளமான பேருந்துகளும் வாங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளுக்கு முன்பு, தாழ்தளப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டன. ஆனால், மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் மீண்டும் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

கோவையிலும் இதே கோரிக்கை நீண்ட நாள்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல்கட்டமாக 58 பேருந்துகளை கடந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்த தாழ்தள பேருந்துகளில் இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ. குறைத்து (kneeling) பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.

அதேபோல, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி, மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி இறங்குவதற்கு சாய்தள வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கோவைக்கு 100 தாழ்தள பேருந்துகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில், 24 பேருந்துகள் முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன.

கோவையில் எந்தெந்தப் பகுதிகளில் இந்த தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 24 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் உக்கடம், காந்திபுரத்தில் இருந்கு சோமனூர், வாளையாறு, அன்னூர், காரமடை, வேலாந்தாவளம், சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு, சின்ன மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.

தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளின் படிக்கட்டுகளைவிட, தாழ்தள சொகுசுப் பேருந்துகளின் படிக்கட்டுகள் மிகவும் உயரம் குறைவாக இருக்கும். இதன் மூலமாக மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் மிகவும் எளிதாக பேருந்துகளில் ஏறி இறங்கலாம். இந்த வசதி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+