Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இ-பாஸ் சிக்கலுக்கு தீர்வு..மலைகளின் அரசி ஊட்டிக்கு போறீங்களா? கம்மி பட்ஜெட்.. அரசின் அசத்தல் ஆஃபர்!

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் மக்கள் பயன்பாட்டுக்காக கோவையிலிருந்து 25 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் உதகைக்கு இயக்கப்பட இருக்கிறது.

கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்திருக்கும் நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது தொடர் விடுமுறையும் வருவதால் பணி புரியும் நபர்கள் கூட கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

25 special buses will run from Coimbatore to Ooty tomorrow

அந்த வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ,சேலம் மாவட்டம் ஏற்காடு போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருக்கிறது.

உதகை: இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குறிப்பாக மலைகளின் அரசியான உதகைக்கு செல்வதற்கு மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அங்கு ஆண்டு தோறும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக கோடை விழாவும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடை விழா 10ஆம் தேதி தொடங்குகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கும் இந்த விழா இருபதாம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடக்க இருக்கிறது.

மலர்க் கண்காட்சி: பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசிப்பதற்காக இந்தியா முழுவதும் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஊட்டிக்கு வருவார்கள். மேலும் சொந்த மற்றும் வாடை வாகனங்கள் மட்டுமல்லாது பட்ஜெட் காரணமாக அரசு பேருந்துகளில் பயணித்து ஊட்டிக்கு வரவும் சுற்றுலா பயணிகள் அனைவரும் விரும்புகின்றனர். தற்போதைய சூழலில் கோவையில் இருந்தே உதகைக்கு பேருந்துகளில் வர உள்ளனர்.

இ-பாஸ்: இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக வரும் ஏழாம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நீலகிரி ஊட்டிக்கு வருவோர் இ-பாஸ் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களை தவிர்த்து விட்டு அரசு பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு உள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த சீசனுக்காக கோவையில் இருந்து ஊட்டிக்கு நாளை முதல் 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

சிறப்பு பேருந்துகள்: கோவையிலிருந்து ஊட்டி மற்றும் கூடலூர் வரை அரசு பேருந்துகள் 80 என்ற எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. தற்போது ஊட்டியில் சீசன் மற்றும் மலர் கண்காட்சியை காண்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளை முதல் கோவையிலிருந்து 25 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாகவும் எனவே சுற்றுலாப் பயணிகள் அதிக பட்ஜெட் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+