பிரபல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் பலி.. கோவையில் சோகம்!
கோவை: கோவையில் பிரபல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக கட்டுமான பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுணாபுரம் அருகே கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் உள்ளது. இங்கு கிருஷ்ணா கலைக் கல்லூரி மற்றும் விடுதிகளும் இருக்கின்றது. இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி அருகே 5 அடி உயரத்தில் மதில் சுவர் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கருங்கற்களால் இந்த மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த மதில் சுவர் அருகே தற்போது புதிதாக மதில் சுவர் கட்டும் பணி நடந்து வந்தது.

அதாவது பழைய மதில் சுவர் அருகே புதியதாக மதில் சுவர் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டது. தொடர்ந்து அதில் மதில் சுவர் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த கட்டுமான பணியில் மேற்கு வங்க மாநிலத்தை சேந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை 5.30 மணியளவில் அங்கு ஏற்கனவே கட்டப்பட்டிருந்த கருங்கற்களால் ஆன மதில் சுவரின் அஸ்திவாரம் வலுவிழந்து சுமார் 100 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது.
யாரும் எதிர்பாரத நேரத்தில் திடீரென மதில் சுவர் இடிந்து விழுந்ததால், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். நொடிப்பொழுதில் இந்த பயங்கர சம்பவம் நடந்து முடிந்தது. இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இதில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடததிலேயே பரிதாபமாக உயிழந்தனர். இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பரூன் கோஷ் என்ற தொழிலாளியும் உயிரிழந்தார். இதனால் , சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் சீனிவாசன் என்பவர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கூறியதாவது: - கட்டுமான இடங்களில் விபத்துக்கான வாய்ப்புகள் எந்த நேரத்திலும் வரலாம். அதற்கான காப்பீடு வாங்கியிருக்காறார்களா? என்பது விசாரணையில் தெரியும். விதி மீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications