பிரபல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் பலி.. கோவையில் சோகம்!
கோவை: கோவையில் பிரபல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக கட்டுமான பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுணாபுரம் அருகே கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் உள்ளது. இங்கு கிருஷ்ணா கலைக் கல்லூரி மற்றும் விடுதிகளும் இருக்கின்றது. இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி அருகே 5 அடி உயரத்தில் மதில் சுவர் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கருங்கற்களால் இந்த மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த மதில் சுவர் அருகே தற்போது புதிதாக மதில் சுவர் கட்டும் பணி நடந்து வந்தது.

அதாவது பழைய மதில் சுவர் அருகே புதியதாக மதில் சுவர் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டது. தொடர்ந்து அதில் மதில் சுவர் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த கட்டுமான பணியில் மேற்கு வங்க மாநிலத்தை சேந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை 5.30 மணியளவில் அங்கு ஏற்கனவே கட்டப்பட்டிருந்த கருங்கற்களால் ஆன மதில் சுவரின் அஸ்திவாரம் வலுவிழந்து சுமார் 100 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது.
யாரும் எதிர்பாரத நேரத்தில் திடீரென மதில் சுவர் இடிந்து விழுந்ததால், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். நொடிப்பொழுதில் இந்த பயங்கர சம்பவம் நடந்து முடிந்தது. இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இதில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடததிலேயே பரிதாபமாக உயிழந்தனர். இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பரூன் கோஷ் என்ற தொழிலாளியும் உயிரிழந்தார். இதனால் , சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் சீனிவாசன் என்பவர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கூறியதாவது: - கட்டுமான இடங்களில் விபத்துக்கான வாய்ப்புகள் எந்த நேரத்திலும் வரலாம். அதற்கான காப்பீடு வாங்கியிருக்காறார்களா? என்பது விசாரணையில் தெரியும். விதி மீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications