பிரபல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் பலி.. கோவையில் சோகம்!
கோவை: கோவையில் பிரபல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக கட்டுமான பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுணாபுரம் அருகே கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் உள்ளது. இங்கு கிருஷ்ணா கலைக் கல்லூரி மற்றும் விடுதிகளும் இருக்கின்றது. இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி அருகே 5 அடி உயரத்தில் மதில் சுவர் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கருங்கற்களால் இந்த மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த மதில் சுவர் அருகே தற்போது புதிதாக மதில் சுவர் கட்டும் பணி நடந்து வந்தது.

அதாவது பழைய மதில் சுவர் அருகே புதியதாக மதில் சுவர் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டது. தொடர்ந்து அதில் மதில் சுவர் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த கட்டுமான பணியில் மேற்கு வங்க மாநிலத்தை சேந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை 5.30 மணியளவில் அங்கு ஏற்கனவே கட்டப்பட்டிருந்த கருங்கற்களால் ஆன மதில் சுவரின் அஸ்திவாரம் வலுவிழந்து சுமார் 100 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது.
யாரும் எதிர்பாரத நேரத்தில் திடீரென மதில் சுவர் இடிந்து விழுந்ததால், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். நொடிப்பொழுதில் இந்த பயங்கர சம்பவம் நடந்து முடிந்தது. இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இதில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடததிலேயே பரிதாபமாக உயிழந்தனர். இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பரூன் கோஷ் என்ற தொழிலாளியும் உயிரிழந்தார். இதனால் , சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் சீனிவாசன் என்பவர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கூறியதாவது: - கட்டுமான இடங்களில் விபத்துக்கான வாய்ப்புகள் எந்த நேரத்திலும் வரலாம். அதற்கான காப்பீடு வாங்கியிருக்காறார்களா? என்பது விசாரணையில் தெரியும். விதி மீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications