மேட்ரிமோனி ஆப்பில் சேட்டை! கல்யாண ஆசை காட்டி 190 பெண்களிடம் பணம் பறிப்பு.. 45 வயது மோசடி மன்னன் கைது
கோவை: மேட்ரிமோனி ஆப் மூலமாக சுமார் 190 பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட 45 வயது நபரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். சுங்கத்துறை அதிகாரி, தொழில் அதிபர் எனக் கூறிக்கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக திருமணம் ஆன பெண்களிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார் இந்த மோசடி மன்னன்.
மேட்ரிமோனி உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் சுங்கத்துறை அதிகாரி எனக் கூறிக்கொண்டு சுமார் 190 பெண்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு 45 வயதான நரேஷ் புரி என்பவர் ஏமாற்றியுள்ளார். ஆன்லைனில் விவாகரத்து மற்றும் கணவனை இழந்த பெண்களை குறிவைத்து ஆசை வார்த்தை கூறி பெண்களிடம் பணத்தை கறந்துள்ளார். இந்த மோசடி சம்பவம் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

திருமணமான பெண்களே டார்கெட்: மேட்ரிமோனி வெப்சைட்டில் 45 வயதான நரேஷ் புரி போலியாக ஒரு அக்கவுண்டை ஓபன் செய்துள்ளார். அதில் உள்ள சுயவிவர பகுதியில், தான் ஒரு தொழில் அதிபர் என்றும் பல லட்சம் வருமானம் இருப்பதாகவும் அளந்து விட்டுள்ளார். இந்தி மட்டுமே தெரிந்த அவர், இந்தி பேசும் பெண்களை பார்த்து பேசி வந்துள்ளார். அதிலும் திருமணமாகி விவாகரத்து ஆன பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களை குறிவைத்து அவர்களிடம் பேசியுள்ளார்.
190 பெண்களிடம் மோசடி: திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களுடன் இனிக்க இனிக்க பேசிவிட்டு அதன்பிறகு தலைமறைவாகிவிடுவாராம். திருமணம் ஆகாத பெண்கள் என்றால் அதிகம் கேள்வி கேட்பார்கள் என்பதால் இவர் திருமணம் முடிந்து தனியாக இருக்கும் பெண்களை டார்கெட் செய்துள்ளார். 2 ஆண்டுகளில் சுமார் 190 பெண்களை நரேஷ் புரி ஏமாற்றியிருக்கிறார்.
மோசடி செய்து பெண்களிடம் பேச வேண்டும் என்பதற்காக தனியாக ஒரு சிம் கார்டையும் போனையும் பயன்படுத்தி வந்துள்ளார். தன்னை நேரில் சந்திக்க விரும்பும் பெண்களை பெங்களூர் வர சொல்வதை வாடிக்கையாக கொண்ட புரி.. கடைசி நேரத்தில் தனது பர்ஸ் தொலைந்துவிட்டது.. நெருக்கடியில் இருக்கிறேன் எனக் கூறி பணம் போட்டுவிடுமாறு கூறுவாராம்.
தட்டி தூக்கிய கோவை போலீஸ்: இதை நம்பி பெண்கள் ஆயிரக்கணக்கில் பணம் போட்டுவிட்டதும் அடுத்த நொடியே போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமைறைவு ஆகிவிடுவாராம். 2 வருடங்களாக இப்படி பெண்களை ஏமாற்றி பல ஆயிரம் ரூபாய் மோசடி செய்து வந்த புரி.. அண்மையில் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார் மூலம் சிக்கியுள்ளார்.
கோவையை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து ஆன தனது மகளுக்காக புரியிடம் பேசியிருக்கிறார். பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில்வே ஸ்டேஷனில் அவர்களை சந்தித்த புரி, 10 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அதன்பிறகு தலைமறைவாகியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில்தான் நரேஷ் புரி சிக்கியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications