மது போதையில் ரகளை .. கேள்வி கேட்டவர் மீது மூஞ்சி மேலேயே பட்டாசு வீசிய கோவை புள்ளிங்கோஸ்
கோவை: தீபாவளி அன்று கோவை பீளமேட்டில் பட்டாசுகளை கொளுத்தி அச்சுறுத்தும் வகையில் வீசிய மது போதை இளைஞர்களை தட்டி கேட்டவர் மீது பட்டாசுகளை வீசியுள்ளனர் புள்ளிங்கோஸ். அவரது வீட்டின் மீதும் பட்டாசுகைள வீசி அச்சுறுத்தி உள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை கடந்த நவம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு அன்று இரவு பலரும் உற்சாகமாக பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்கள். கோவை பீளமேடு கோபால்சாமி நாயுடு ஏரியா பின்புறம் உள்ள வீட்டின் மீது புள்ளிங்கோஸ் இளைஞர்கள் சிலர் தீபாவளி அன்று இரவு 11 மணி அளவில் மதுபோதையில் பட்டாசுகளை வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்கள்.

அப்போது அந்த வீட்டில் இருந்த பாலச்சந்தர் ஏன் இப்படி ரகளையில் ஈடுபடுறீங்க என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த இளைஞர்கள், அவர் மீது ஆவேசத்துடன் பட்டாசுளை கொழுத்தி வீசிவிட்டனர். அதேபோல் அவரது வீட்டின் மீதும் சரமாரியாக பட்டாசுகளை வீசி அச்சுறுத்தினர். மேலும் பாலச்சந்தரை ஆபாசமாக பேசி அவர்களை மிரட்டினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் கோவை பீளமேடு காவல்நிலையம் சென்ற பாலச்சந்தர், நடந்த விவரத்தை கூறி புகார் அளித்தார்.
பாலச்சந்தர் அளித்த புகாரின் பேரில், கோவை பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இளைஞர்கள் மது போதையில் பட்டாசுகளை கொளுத்தி அச்சுறுத்தும் வகையில் வீசியது உறுதியானது.. இதையடுத்த ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ஆறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், வெடிபொருட்களை கவனக்குறைவாக கையாளுதல், ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்ட்ல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே சம்பவம் நடந்த கோவை பிளேமேடு பகுதியில் ரோந்து பணியை போலீசார் அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்












Click it and Unblock the Notifications