Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஜிட்டலுக்கு மாறிய சார் பதிவாளர் சாந்தி.. மொபைலை திறந்த கோவை டிஎஸ்பி... பாய்ந்த ஆக்சன்

Subscribe to Oneindia Tamil

கோவை: மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் பஸ் நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் அமைந்திருக்கிறது. இங்கு நேற்று முன்தினம் அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். அப்போது சார் பதிவாளர் டிஜிட்டல் முறையில் மட்டுமே ரூ.25.25 லட்சம் லஞ்சம் வாங்கியதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தனர். அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அடிக்கடி ரெய்டு நடத்துவது வழக்கம். கணக்கில்வராத பணம் பிடிப்பட்டால் அவர்களிடம் விசாரணை நடத்துவாரகள். விசாரணையில் அவர்கள் மீது தவறுகள் இல்லை என்றால் பிரச்சனை இல்லை.. மாறாக கணக்கில் வராத பணம் லஞ்சம் வாங்கி சேர்த்தவை என்று தெரியவந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும், சஸ்பெண்ட், கைது, துறைரீதியான நடவடிக்கைகளும் அதிரடியாக பாயும்.

Coimbatore deed

அந்த வகையில் கடந்த இரண்டு ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு நடத்தி வருகிறார்கள். அப்படித்தான் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனை ஏராளமான பணம் சிக்கியுள்ளது. இதுபற்றி பார்ப்போம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் பஸ் நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இங்கு சார் பதிவாளர்களாக ராமமூர்த்தி, சாந்தி ஆகியோர் வேலை செய்து வருகிறார்கள்.. இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு அதிக அளவில் பறந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி மாலை கோவை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திவ்யா தலைமையில் போலீசார், மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது நடந்த சோதனையின் போது, சார் பதிவாளர் சாந்தி மட்டும் இருந்தார். அவரிடமும், அலுவலகத்தில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். மேலும் அலுவலகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை நேற்று மதியம் வரை தொடர்ந்தது.

அப்போது நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் சார் பதிவாளர் சாந்தி டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ரூ,25 லட்சத்து 33 ஆயிரத்து 880 லஞ்சம் பெற்றிருப்பதும், அதை குடும்பத்தினரின் வங்கி கணக்கிற்கு மாற்றி வாங்கியதையும் கண்டுபிடித்தனர்..
இவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்ட நவீன்குமார் என்பவர் முன்கூட்டியே லஞ்ச பணத்துடன் தப்பி ஓடியதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் பிரவீன்குமார், சார் பதிவாளரின் வாகன டிரைவர் ராஜா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பிறகு சார் பதிவாளர் சாந்தி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் பரிந்துரைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+