Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேடைக்கு வந்து சொல்லுங்க.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் ஒருவர், தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அவரை மேடைக்கு அழைத்து குறைகளை சொல்லுமாறு கூறினார் நிர்மலா சீதாராமன்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வந்துள்ளார். கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் இன்று நடைபெற்ற வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, தொழில்முனைவோர் சிலர் தங்களுக்கு வங்கிக் கடன் தராமல் இழுத்தடிப்பதாக புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

An entrepreneur complaint at loan disbursement event chaired by Finance Minister Nirmala Sitharaman

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியின்போது கடன் ஆணைகளை வழங்கி நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சிறு, குறு தொழில்முனைவோருக்கு உத்தரவாதம் இன்றி கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தபோதும் தனக்குக் கடன் மறுக்கப்படுவதாக தொழில்முனைவோர் சதீஷ் என்பவர் குற்றம்சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ், "நான் பிரதமர் அலுவலகத்திற்கும் புகார் அளித்துள்ளேன். அரசு கடன் உதவி உறுதியாக வழங்கப்படும் என அறிவித்த நிலையில் ஏன் எனக்கு கடன் தரவில்லை என கேட்க வந்தேன்." எனத் தெரிவித்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குற்றம்சாட்டிய சதீஷை மேடைக்கு அழைத்தார்.

"சும்மா லோன் கொடுக்கிறோம் காட்டுவதற்காக 10 பேருக்கு லோன் கொடுக்குறாங்க எனச் சொல்கிறார்கள். ஜனநாயகத்தின் தூணாக உள்ள மீடியா, அவரிடம் பேட்டி எடுத்து நல்ல வேலை செய்திருக்கிறார்கள். அன்பு நண்பரே வாங்க மேல.. மோடி ஆட்சியில் எல்லோரின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம். உங்களுக்கு லோன் கிடைக்கவில்லை என்பதை மேடையில் வந்து சொல்லுங்கள்" என அழைத்தார் நிர்மலா சீதாராமன்.

இதையடுத்து மேடையேறிய தொழில்முனைவோர் சதீஷ், தனக்கு வங்கிக் கடன் மறுக்கப்படுவதாக கூறி, விவரங்களைத் தெரிவித்தார். முதலில் கடன் வழங்க ஒப்புதல் அளித்தார்கள். ஆனால் அதன் பிறகு வரவில்லை, ரூ.40 லட்சம் கடனுக்கான உத்தரவாதத்தை வழங்கத் தயார் என்று கூறிய பிறகும் தனக்கு கடன் கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். சதீஷின் முறையீடு பற்றி சம்பந்தப்பட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற வங்கிக் கடன் வழங்கும் நிகழ்வின்போது தொழில்முனைவோர் ஒருவர் தனக்கு வங்கி கடன் கிடைக்கவில்லை என புகார் சொன்னதையடுத்து, அவரை மேடைக்கு வந்து குறையை தெரிவிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+