தமிழ் சினிமாவில் வன்முறை, சாதி.. இரண்டையும் முன்னிறுத்துவதை நிறுத்துங்க.. அண்ணாமலை பேட்டி!
கோவை: சினிமாவில் வன்முறை, சாதி போன்றவற்றை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லோருக்கும் பொறுப்பு இருப்பதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்தில் என்டிஏ கூட்டணி இறுதியாகும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின், அண்ணாமலை பல்வேறு விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே கோவையில் சில தொழில்களை செய்து வரும் அண்ணாமலை, அடுத்ததாக பெங்களூரில் ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கி இருக்கிறார். இதனிடையே கோவால் ஐயர்ன்மென் போட்டியிலும் பங்கேற்றிருந்தார்.

சில வார இடைவெளிக்கு பின் மீண்டும் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள அண்ணாமலை, கோவையில் தமிழக பாஜக விவசாய அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பாக கோவையில் வரும் நவம்பர் 19ஆம் தேதி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகிறார். இந்த மாநாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளையும், விஞ்ஞானிகளையும் சந்திக்க உள்ளார். அதேபோல், திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்ற விஷயங்களை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும். குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. கோவை மாணவி விவகாரத்தில் காவல்துறை அவர்களின் வேலையில் கோட்டை விட்டுள்ளார்கள்.
காவல்துறையும் தனது தவறுகளை திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும். காவல்துறையை இன்னும் சிறப்பாக முதல்வர் ஸ்டாலின் கையஆள வேண்டும். அதேபோல் பீகாரில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும். பீகாரை போலவே தமிழ்நாட்டிலும் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். பீகார் தமிழ்நாடு அளவிற்கு வளர்ந்திருக்கிறதா என்றால் இல்லை. அதனால் இங்கு அதிகளவில் மக்கள் வாய்ப்பு தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டை பொறுத்தவரை எப்போதும் சிறந்த மாநிலம். தமிழகத்திலும் அயர்ன் மேன் போன்ற நிகழ்வுகளை நடத்திட வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் தேர்தல் இன்னும் சூடு பிடிக்கவில்லை. மக்கள் இன்னும் தேர்தலுக்கு தயாராகவில்லை. டிசம்பர் மாதத்தில் அனைத்தும் சரியான கோணத்தில் விழுந்து கூட்டணி உறுதியாகும். இறுதிப்போட்டிக்காக என்டிஏ கூட்டணி தயாராகிக் கொண்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications