கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக மீண்டும் தகவல் பரவி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரச்சாரம், வாக்குறுதிகள் என அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் ஆளும் கட்சியான திமுக இன்றுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கொங்கு மண்டலத்துக்கு ஸ்கெட்ச்
அதிமுகவின் எஃகு கோட்டையாக திகழ்கிறது கொங்கு மண்டலம். கடந்த காலங்களில் கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளதால் இந்த முறை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. செந்தில் பாலாஜி மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், வரும் தேர்தலில் அவர் தெற்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது.
தெற்குத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து செந்தில் பாலாஜியே மறுத்திருந்தார். இதனால், திமுக வேட்பாளர் பட்டியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுகவில் கோவை தெற்குத் தொகுதியைக் குறிவைத்து மீனா ஜெயகுமார், மகேந்திரன், ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். செந்தில் பாலாஜியுடம் கரூரில் தீவிரமாகப் பயணியாற்றி வருகிறார்.
தெற்குத் தொகுதிக்கு குறி
இந்நிலையில், செந்தில் பாலஜியே கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக மீண்டும் தகவல் பரவி வருகிறது. கோவையில் எஸ்பி வேலுமணி, அண்ணாமலை என முக்கிய நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், திமுக சார்பில் வலுவான அதே சமயம் மக்களுக்குப் பரிட்சயமான நபரை களமிறக்க வேண்டும் என்பதால் செந்தில் பாலாஜியை கோவை தெற்கில் போட்டியிட தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்தமுறை கரூரிலும் செந்தில் பாலாஜிக்கு அதிக எதிர்ப்புகள் இருப்பதால் கோவையில் போட்டியிட செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளாராம். அவர் அங்கு போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில், கோவை தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட திமுக வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு செந்தில் பாலாஜியே நேரடியாக குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி
அதில், தனது செல்போன் எண்ணைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுமாறும், எதுவாக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். தெற்குத் தொகுதி நிலவரம் குறித்தும் அங்குள்ள நிர்வாகிகளிடம் கேட்டு வருகிறார். சிறுபான்மை மக்கள் அதிகளவிலும், மற்ற சமுதாய மக்கள் சமஅளவிலும் இருப்பதால் தெற்குத் தொகுதியில் எளிமையாக வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப் போடுகிறாராம். இந்த தகவலால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோவை திமுக நிர்வாகிகள் கூறுகையில், முதலில் செந்தில் பாலாஜி தேர்தல் வரை தான் இங்கிருப்பேன். அதன் பின்னர் இங்கிருந்து வெற்றி பெற்று 2 அமைச்சர்கள் கிடைத்துவிடுவார்கள். பின்னர் கரூர் சென்றுவிடுவேன் என்று கூறிவந்தார். தற்போது கோவை தெற்கில் அவர் போட்டியிடுவதால் இங்குள்ள நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ சீட், அமைச்சர் பதவிக்கான வாய்ப்புகள் பறிபோய்விடும்.
கரூர், கோவையில் வரப்போகும் பாதிப்பு
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவது கோவை, கரூர் இரண்டு இடங்களிலுமே பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் வாக்களித்த செந்தில் பாலாஜி கோவைக்கு சென்றுவிட்டார் என்றும், தேர்தலுக்காக கோவை வந்துள்ள செந்தில் பாலாஜி தேர்தல் முடிந்ததும் மீண்டும் சென்றுவிடுவார் என்கிற வகையில் செந்தில் பாலாஜியை வைத்து எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்வார்கள். இதனால், இரண்டு மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்படும். அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிப்பது தான் கட்சிக்கு நல்லது என்றனர்.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications