அவிநாசி சாலையில் 5 நாட்களுக்கு அதிரடி மாற்றம்.. கோவை பயனீர் மில் கிட்ட அதை கவனிச்சீங்களா?
கோவை: கோவையின் இதய பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதற்காக அவிநாசி சாலையில் 10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது.
மேம்பால கட்டுமானத்திற்காக அவிநாசி சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவை மாநகர், அவிநாசி சாலையில் ஜி.டி மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்ற வந்தது. அதனால் எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டது. தற்போது ஜி.டி மேம்பால கட்டுமான பணிகள் முடிவடைந்து கடந்தாண்டு மேம்பாலம் திறக்கப்பட்டது. தற்போது மேம்பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி சாலையில் 5 நாட்களுக்கு மாற்றம்
தற்போது அவிநாசி சாலையிலுள்ள எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னல்கள், இன்று (13.06.2026) ஆம் தேதி முதல் 17.06.2026 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இதனால் பயனீர் மில் சந்திப்பு டாமினோஸ் அருகில் உள்ள 'யு' டர்ன் தற்காலிகமாக மூடப்படுகிறது.
போக்குவரத்து சிக்னல்
இதில், போக்குவரத்து சிக்னல் செயல்பாடுகளின் தன்மை மற்றும் வாகன போக்குவரத்தையும் ஆய்வு செய்து, சிக்னல்களில் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா என்பதையும் ஆய்வு செய்து நிரந்தரமாக போக்குவரத்து சிக்னல்கள் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகளால் பீளமேடு, காந்தி மாநகர், பாரதி காலனி செல்லும் வாகன ஓட்டிகள் பயனடைவார்கள். இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று கூறியுள்ளனர். இதற்கு கோவை மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications