கோவையில் நண்பனுக்கு வண்டி கொடுத்தவருக்கு வந்த சோதனை.. டிடி ஃபைன் 12000 அபராதம்.. பார்க்கிங் 14000
கோவை: கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக போக்குவரத்து போலீசார் 12000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அத்துடன் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். அப்படி பறிமுதல் செய்த வாகனத்தை கோவையில் வாகன கட்டண பார்க்கிங்கில் பாதுகாப்பிற்காக நிறுத்தி உள்ளனர். கடந்த ஓராண்டுகளாக வண்டியை எடுக்காத வாகன உரிமையாளர், நீதிமன்றத்தில் 12000 அபராதம் கட்டி வாகனத்தை எடுக்க முயன்ற போது ட்விஸ்ட் காத்திருந்தது.
கோவை மாநகரம் பீளேமேட்டைச் சேர்ந்த மாணிக்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 25.10.2023 அன்று ஸ்ப்ளண்டர் வாகனத்தை நண்பர் ஒருவர் வாங்கி கொண்டு சென்றார். வீடு வரை போய் வருவதாக கூறி இரவல் வாங்கி சென்றார்.. அவர் வாகனத்தை எடுத்துக் கொண்டு சாய்பாபா காலனி பகுதிக்கு வந்திருக்கிறார்.. அன்று இரவு என் வண்டியில் அவர் குடிபோதையில் வந்திருக்கிறார்..

இதனால் அங்கு வாகன சோதனை செய்தபடி நின்ற போலீசார், அவருக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்தனர். தொடர்ந்து வாகத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கான அபராதத்தை நீதிமன்றத்தில் கட்டிவிட்டு வாகனத்தை எடுத்துக்கொள்ள சொன்னார்கள்.
இதற்காக கடந்த ஆறு மாதமாக அலைந்து வந்தேன்.. ஒருவழியாக அபராதத்தையும் கட்டினேன். அவர்கள் வாகனத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறி ஸ்லிப் தந்தார்கள். அத்துடன் அவர்கள் பார்க்கிங்கில் கட்டணம் எவ்வளவு கட்டணம் சொல்கிறார்களோ, அதையும் கட்டிவிட்டு வாகனத்தை எடுத்துக் கொள்ளுமாறு போலீசார் கூறினார்கள்..
கோர்டில் அபராதம் கட்டி வாகனத்தை எடுக்க 12000 ரூபாய் ஆனது. அதை காவல் நிலையத்தில் காட்டிய போது, பார்க்கிங்கில் வாகனம் இருப்பதாகவும் தெரிவித்தனர். பார்க்கிங்கில் வாகனத்தை விட்டதற்கான ஸ்லிப்பை காட்டிய போது, ஓராண்டு வரை வாகனம் இருந்தது. எனவே 14040 ரூபாய் கட்டுமாறு பார்க்கிங்கில் கூறினார்கள்.. போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தால், அவர்கள் தான் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்ளாமல், அதனை பார்க்கிங்கில் விட்டுவிட்டார்கள்.. இது எந்த விதத்தில் நியாயம்.." என்று கேள்வி எழுப்பினார்.
வண்டியை எடுக்க தாமதம் ஆனது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம், "வண்டியை பறிமுதல் செய்த உடனேயே என்னால் பணத்தை கட்டி வாகனத்தைமீட்க முடியவில்லை.. ஏனெனில் பணத்தை புரட்ட முடியவில்லை.. 3 மாதம் கழித்து போன போது, போலீசார் அடுத்த வாரம் வா, அடுத்த வாரம் வா என்று கூறினார்கள்.. 10, 12 முறை நான் வந்த பிறகு, ஒரு கட்டத்தில் கோர்டில் போய் கட்டி எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்" இவ்வாறு தெரிவித்தார்.
-
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
கோவையில் தொடங்கிய திமுக ஆட்டம்.. ஃபயர் மோடில் செந்தில் பாலாஜி.. பரபரக்கும் களம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications