கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் நடைபெறுகிறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி இடையேயான போட்டியால் கோவை களம் அனல் பறக்கிறது. செந்தில் பாலாஜி கோவை திமுகவை அளிக்க ஸ்கெட்ச் போட்டு வேலை செய்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவையில் பிரச்சாரம் செய்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, "கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் மிக அதிக அளவில் நடந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்குகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

Annamalai slams Senthil balaji

ராகுல் காந்தி தயாராக இல்லை

தமிழ்நாட்டை ஒரு கஞ்சா தலைநகரமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். திமுகவின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் சர்வதேச அளவில் கஞ்சா விற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 'ஆன்டி கஞ்சா டாஸ்க் போர்ஸ்' அமைக்கப்பட்டு, 100 நாட்களுக்குள் மாற்றம் கொண்டு வரப்படும்.

ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஸ்டாலின் கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரள அரசுக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை. இந்தத் தேர்தலை ஒரு பெரிய மாற்றமாக, சரித்திரப் பதிவாக மாற்ற வேண்டும். ராகுல் காந்தி தமிழகம் வருவதற்கு தயாராக இல்லை. அவருக்கு தேர்தல் முடிவு என்ன என்பது தெரியும்.

திமுக காங்கிரஸ் கூட்டணி

மே 4 ஆம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராவார். திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை காங்கிரசுக்கு எதிராக தான் நடத்தியது. தமிழகத்திற்கு ஒவ்வொரு பிரச்சனை வரும்போதும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் மாநிலத்தில் திமுக ஆட்சியும் தான் இருந்தது. இவற்றையெல்லாம் பார்த்து தான் மக்கள் காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று முடிவுக்கு வந்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டுவதற்கு மட்டும்தான் கோவை வருகிறார். இங்கு திட்டங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டவை. திமுகவை ஒரு இடத்திலும் கூட வர விடக்கூடாது. திமுக கூட்டணியில், அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கே முறையாக தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் திமுக தோற்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார்.

செந்தில் பாலாஜி மீது விமர்சனம்

செந்தில் பாலாஜி கோவை மாவட்ட திமுகவை அழிப்பதற்கு ஸ்கெட்ச் போட்டு வேலை செய்கிறார். செந்தில் பாலாஜி ஒரு விஷக்கிருமி. கரூரில் 251 பட்டிகள் போடப்பட்டது. அதிமுக விஜயபாஸ்கர் இது குறித்து புகார் அளித்து மாவட்ட ஆட்சியர் அந்த பட்டிகளுக்கு பூட்டு போட்டுவிட்டார். கோவை தெற்கு தொகுதியிலும் இதுபோன்று பல்வேறு பகுதிகளில் பட்டி அமைக்கப்படுகிறது.

அங்கு உதயநிதி ஸ்டாலின் படத்தை போடுகிறார்கள். வருகிற 18ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார். மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து பல்வேறு நிதிகளை கொடுத்துக் கொண்டே தான் இருக்கும். திமுகவினர் பல பகுதிகளில் 8,000 ரூபாய் டோக்கன்களை கொடுத்து வருகிறார்கள். இப்படித்தான் காதில் பூ சுற்றுவார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+