உடற்கூராய்வு வளாகத்தை சுற்றி ரத்தம்.. கோவை அரசு மருத்துவமனையில் திக் திக். என்ன நடந்தது?
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறாய்வு வளாகத்துக்கு முன்பு ரத்தம் கலந்த சிவப்பு நிற திரவம் வெளியேறியது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்த மக்கள், இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்ட மக்களும் சிகிச்சை பெறுகின்றனர். மேற்கு மண்டலத்தின் முக்கிய அரசு மருத்துவமனையாக இது இயங்கி வருகிறது.

சமீபத்தில் கோவை அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு, இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்த வழக்கு சர்ச்சையானது. இந்நிலையில் தற்போது சுகாதார சீர்கேடு புகாரில் சிக்கியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், உடற்கூராய்வு மையம் உள்ளது. கடந்த சில நாட்களாக அந்த வளாகத்துக்கு முன்பு, ரத்தம் கலந்த தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. அது பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி. அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை தரப்பில் விசாரித்தபோது, "கோவை அரசு மருத்துவமனை உடற்கூராய்வு கூடத்தில், சராசரியாக தினசரி சுமார் 20 உடல்களுக்கு கூராய்வு செய்யப்படுகின்றன. தினசரி மாலை பணி முடிந்து, மேடைகளை கழுவி விடும்போது வரும் நீர்." என்று கூறினர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஆனாலும், ப்ளீச்சிங் பவுடரின் வெள்ளை நிறம் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் மாறும் அளவுக்கு கழிவுநீர் வெளியேறியது. இந்த ஒரு இடத்தில் மட்டுமல்லாமல், மருத்துவமனை வளாகத்தில் வேறு சில இடங்களிலும் கழிவு நீர் வெளியேறி சுகாதார சீர்கேடு பிரச்னை நிலவுவதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்தப் பிரச்னை குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா வெளியிட்டுள்ள விளக்கத்தில், "இந்தப் பிரச்னையை சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்னை சரி செய்யப்படும்." என்று கூறியுள்ளார். விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications