ஸ்டாலினுக்கு பில்டிங், பேஸ்மென்ட் வீக்… துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிண்டல்
கோவை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பில்டிங், பேஸ்மென்ட் வீக் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார் .
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை ஏற்பட திமுக - காங்கிரஸ் கூட்டணியை காரணம் என கூறினார்.
தான் தமிழக முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் மோடியிடம் பேசி, ஜல்லிக்கட்டு தடையை நீக்கியதாகவும் சுட்டிக்காட்டினார். அதற்காக தன்னை யாரும் ஜல்லிக்கட்டு நாயகன் என கூற வேண்டாம் என்றும் அப்போது கேட்டுக் கொண்டார்.
பெரம்பலூரில் அதிமுக பிரச்சாரம்... பட்டாசு வெடித்ததில் டீக்கடை தீக்கிரையானது
அதிமுக என்ற ஆலமரத்தை, சுனாமி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா தங்களை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அவருக்கு பயந்து திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செய்யாமல் கிடப்பில் போட்டதாகவும், ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனக்கும், முதல்வர் பழனிசாமிக்கும் கலகத்தை ஏற்படுத்த நினைக்கும் மு.க ஸ்டாலினுக்கு பில்டிங், பேஸ்மென்ட்வீக் எனவும் விமர்சித்தார்.