செஸ் ஒலிம்பியாட்.. கலக்கும் கோவை.. செஸ் போர்டு வடிவில் ஜொலிக்கும் பஸ் நிறுத்தங்கள்
கோவை : தமிழகத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை மாநகர பகுதிகளில், செஸ் போர்டு போன்று மின்னொளியில் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Recommended Video
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் வரும் 28-ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளன. இந்த பிரமாண்ட போட்டித் தொடரில், சுமார் 188 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர். இதனால் இந்த செஸ் போட்டி தொடரை, தமிழக அரசு முக்கியமான விஷயமாக கருத்தில் கொண்டுள்ளது. இதையொட்டி, இந்த பிரமாண்ட விளையாட்டுத் தொடர் குறித்து, தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த விழா நிகழ்ச்சிக்களுக்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் மும்முரமாக கவனித்து வருகின்றன. இதன் வெளிப்பாடாக, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் செஸ் போட்டிக்கான விளம்பர காட்சி, தமிழக அரசின் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த விளம்பர காட்சியில், சதுரங்க பலகையை போன்று மாற்றப்பட்ட நேப்பியர் பாலத்தையும் காணமுடியும். நேப்பியர் பாலம் தற்போது செஸ் போர்ட் போல் கருப்பு, வண்ண நிறத்தால் வர்ணம் தீட்டப்பட்டு கூடுதல் அழகோடு மிளிர்கிறது. இதனை பார்க்க தினந்தோறும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். உற்சாகமாக இந்த பாலத்தோடு இணைந்து, புகைப்படமும் எடுத்தும் மகிழ்கின்றனர்.
இதேபோல், கோவை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகரில் 10க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் செஸ் போர்டை போன்று மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் இந்த பேருந்து நிறத்தங்கள் ஜொலிப்பது, பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வரகிறது. பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள், இதனை பார்த்து ஆர்முடன் செல்பி எடுத்து உற்சாகமடைகின்றனர். முதல்கட்டமாக லட்சுமி மில்ஸ் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தம் வண்ணமயமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து பேருந்து நிறுத்தங்கள் மின்னொளியால் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
காதுக்கு வந்த தகவல்.. என்ன நடந்தாலும் விடக்கூடாது.. செந்தில் பாலாஜி போட்ட சபதம்.. என்னாச்சு? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications