Coimbatore: நெஞ்சை உலுக்கும் கொடூரம்.. சாகுற வயசா இது? கோவையில் 13 வயது சிறுவன் கொன்று புதைப்பு!
கோவை: "இதோ மீன் பிடித்துவிட்டு உடனே வந்துவிடுகிறேன்" என்று துள்ளிக் குதித்து விளையாடச் சென்ற ஏழாம் வகுப்பு மாணவன், சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் கோவை இருகூர் பகுதியில் ஒட்டுமொத்த மக்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
கோவை இருகூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரது 13 வயது மகன், ஆர்.ஜி புதூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால், கடந்த 15-ஆம் தேதி பிற்பகலில் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளான்.

ஆசையாய் மீன் பிடிக்கச் சென்ற இடத்தில், சிறுவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சக நண்பர்கள் இருவர், அங்கிருந்த காலி மதுபாட்டிலால் அந்த 13 வயது சிறுவனின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன், துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இரவு நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பதறிய பெற்றோர், அவனுடன் சென்ற நண்பர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால், தாங்கள் செய்த கொடூரத்தை மறைக்க நினைத்த அந்தச் சிறுவர்கள், "யாரோ ஒரு மர்ம நபருடன் அவன் தனியாகச் சென்றான்" என்று கூறி பெற்றோரை நம்ப வைத்துள்ளனர்.
மகனைக் காணாமல் தவித்த பெற்றோர், நெஞ்சு துடிக்கச் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையைத் கையில் எடுத்து, அந்தச் சிறுவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோதுதான், பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு, மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக உடலை அங்கேயே ரகசியமாகக் குழிதோண்டிப் புதைத்த திடுக்கிடும் உண்மையை ஒப்புக்கொண்டனர்.
சிறுவர்கள் காட்டிய அடையாளத்தின்படி, இன்று (மே 18) காலை சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், புதைக்கப்பட்ட மாணவனின் உடலைத் தோண்டி எடுத்தனர். தன் பிள்ளை ஏதோ விளையாடத்தான் சென்றிருக்கிறான் என்று நம்பிய பெற்றோர், அவன் மண்ணுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதைக் கண்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கடித்தது.
மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப் பருவத்தில், விளையாடும் வயதில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட கோபத்தால் ஒரு பிஞ்சு உயிர் பறிபோனதும், சக சிறுவர்களே இந்த விபரீதத்தைச் செய்திருப்பதும் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications