கோவைக்கு பெருமை சேர்க்கும் பிரமாண்ட திருவள்ளுவர் சிலை.. முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!
கோவை: கோவையில் தமிழ் எழுத்துகளால் உருவாக்கப்பட்ட 25 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக மாநகராட்சியில் உள்ள 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தபட்டு, குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தபட்டு வருகிறது.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சிக்குளம் ஏரிக்கரை நுழைவாயிலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை 25 அடி உயரமும், 15 அடி அகலமும், 20 அடி நீளமும், 2.5 டன் எடையும் கொண்டது.
திருவள்ளுவரின் 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சிலையின் முன்பு திருவள்ளுவரின் முதல் குறளான 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்ற குறள் பொறிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளிக் காட்சி வாயிலாக வைக்கிறார். மேலும், கோவை மாநகரில் ஆடிஸ் வீதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறிவு சார் நூலகத்தையும், உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் அமைந்துள்ள அனுபவ மையத்தையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications