பிபிஇ கிட்டோடு.. களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. கொரோனா வார்டில் அதிரடி விசிட்.. கோவையில் தீவிர ஆய்வு
கோயம்புத்தூர்: கோவைக்கு கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்ள சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டார்.
Recommended Video
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்து வரும் நிலையில் கோவையில் இன்னும் முழுதாக கொரோனா கட்டுப்படுத்தப்படவில்லை. கோவையில் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தனி டீமை தமிழக அரசு அனுப்பி உள்ளது.
கோவையில் திமுக எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பை திமுக அமைச்சர்கள் 2 பேர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே கோவைக்கு நேரில் சென்று கொரோனா ஆய்வு பணிகளை செய்த முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் கோவை சென்றார்.

ஸ்டாலின்
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்தார். இதற்காக நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் ஈரோடு சென்றார். காலையில் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி மருத்துவ கல்லூரிக்கு சென்று அங்கு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார்.

ஈரோடு
அங்கு கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தின் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் மருத்துவர்களிடம் பேசினார். இதையடுத்து அங்கிருந்து திருப்பூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கும் ஆலோசனைகளை நடத்தினார். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து கூடுதல் படுக்கைகளை திறந்து வைத்தார்.

திருப்பூர்
அதோடு ஈரோடு, திருப்பூரில் புதிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதன் பின் கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு லாக்டவுன் விதிகளை ஆய்வு செய்தார். கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரடியாக சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

கோவை
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்போடு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு நோயாளிகளிடம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்கள் உடல் எப்படி இருக்கிறது, சிகிச்சை முறை நன்றாக இருக்கிறதா, தேவைகள் நிறைவேற்றப்படுகிறதா என்று முதல்வர் ஸ்டாலின் நோயாளிகளிடம் அன்பாக கேட்டறிந்தார்.

ஆலோசனை
இதையடுத்து கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் தலா 10 இன்னோவா ஆம்புலன்ஸ் வீதம், 50 இன்னோவா ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். கோவையில் கொரோனா கேஸ்கள் இரண்டு நாட்களாக குறைத்தாலும், தமிழகத்திலேயே கோவையில் மட்டும்தான் கொஞ்சம் நிலைமை மோசமாக உள்ளது.

இன்று மீட்டிங்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார். நான்கு மாவட்டங்களில் கொரோனாவை துரிதமாக கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications