கவுண்டம்பாளையம் நடராஜ் நகருக்கா செல்கிறீர்கள்? அப்போ கவுன்சிலர் வைத்த வாஷ்பேசினில் கை கழுவுங்கள்!
கோவை: கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக வீதிகளுக்கு உள்ளே செல்லும் முன்பாக கைகளை கழுவ சோப்புடன் வீட்டு முன்பாக வாஷ்பேசினை அதிமுக பெண் உறுப்பினர் உருவாக்கியுள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைரஸ் பரவாமல் தடுக்க கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ சுகாதார துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சுத்தமாக கை கழுவுதல்
இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பழைய ஆறாவது வார்டு நடராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் சோனாலி பிரதீப் என்பவர் தனது வீட்டின் முன்பாக வாஷ்பேசின் அமைத்து அதில் சோப்பு மற்றும் திரவங்களை வைத்து வீதிக்குள் செல்லும் முன்னர் அனைத்து பொது மக்களும் கைகளை சுத்தமாக கழுவ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

பணிகள்
அ.தி.மு.க. உறுப்பினரான மேலும் தனது பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு மளிகைச் சாமான்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், தமிழக அரசுடன் அனைத்து பொதுமக்களும் இந்த அவசர கால நேரத்தில் உதவும் படி இந்தப் பணிகளை செய்து வருகிறேன்.

ஊரடங்கு
இந்த நோய் நம்மை தாக்காமல் இருக்க, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டை விட்டு வெறியேறாமல் அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அலட்சியம்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்க அறிவுறுத்தினால் அவர்கள் அத்தியாவசிய பணி என கூறிக் கொண்டு வெளியே வருகிறார்கள். இதற்காக போலீஸார் கையெடுத்து கும்பிட்டு அறிவுறுத்தியும் யாரும் கேட்பதாக இல்லை. இது சமூக பரவலை அதிகரிக்கும் என கூறியும் பொதுமக்கள் சிலர் அலட்சியமாக உள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications