கோவை அருகே அசிங்கம்.. மேட்டுப்பாளையத்தில் தனியாக இருந்த கல்லூரி மாணவி.. எல்லை மீறிய அண்ணன்
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையன்று அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது அண்ணனே, சொந்த தங்கை என்றும் பாராமல் மிரட்டி அத்துமீறியுள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சொந்த அண்ணனே, சொந்த தம்பியே, சொந்த சித்தப்பாவே, சொந்த மாமாவே, ஏன் சொந்த அப்பாவே.. இப்படி நெருங்கிய சொந்த பந்தங்களால் கூட பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது நடக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் அவ்வப்போது இந்த கேவலங்களை கேள்விப்பட்டிருப்போம். அப்படியான ஒரு கேவலமான காரியம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையன்று அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 20 வயதான அவருடைய சொந்த அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கிறார். அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவருடைய அண்ணன், தனது உடன் பிறந்த தங்கை என்றும் பாராமல் அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார்.
அதற்கு அவர் அனுமதிக்காததால் அவரை மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அத்துடன் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி துன்புறுத்தினாராம். உடனே அந்த மாணவி, அவரை எதிர்த்து தாக்க முயன்றபோது, தனது கையில் இருந்த பிளேடை எடுத்துக்கொண்டு, தன்னை தாக்கினால், பிளேடை எடுத்து தனது கையில் வெட்டிவிடுவேன் என்றும் மிரட்டினாராம்.
இதனிடையே பிளேடு பட்டு அவருடைய வயிற்றில் பட்டு ரத்தம் வெளியேறியது. உடனே அந்த மாணவி இது குறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து வயிற்றில் காயம் ஏற்பட்ட அந்த மாணவியின் அண்ணனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தனது அண்ணனே தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக பெற்றோரிடம் கூறி அழுதார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியின் அண்ணனை கைது செய்தனர். உடன் பிறந்த அண்ணனே தனது தங்கையை பலாத்காரம் செய்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications