கோவை நொய்யல் ஆற்றில் தவறி விழுந்து காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழப்பு.. என்ன நடந்தது?
கோவை: கோவை மாநகராட்சி 56 வது வார்டு மாமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி , ஒண்டிப்புதூர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நொய்யல் ஆற்றிற்கு கிருஷ்ணமூர்த்தி போன போது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கோவை ஒண்டிப்புதூரில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 62 வயது ஆகிறது. இவர் கோவை மாநகராட்சி 56 வது வார்டு மாமன்ற உறுப்பினரான இருந்து வந்தார். தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி நேற்று (புதன்கிழமை) இரவு 9.30 மணியளவில் ஒண்டிப்புதூருடன் எல் அண்ட் டி பைபாஸ் சாலையை இணைக்கும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இயற்கை உபாதையை கழிப்பதற்காக நொய்யல் பாலம் அருகே தனது வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

பின்னர் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி பாலத்தில் இருந்து இறங்கி பாலத்தின் முனையில் உள்ள ஆற்றங்கரை அருகே சென்றார். ஆனால் இருட்டாக இருந்ததால், அங்கு கொட்டப்பட்டிருந்த உணவு கழிவுகளை மிதித்து, தவறி விழுந்தார். அப்போது ஆற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்ததார். தண்ணீர் வரத்து அதிகமாக இல்லாததால், அவரது உடல் அங்கேயே இருந்தது.
கவுன்சிலர் தவறி விழுந்து இறந்த தகவலை வாகன ஓட்டிகள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து விரைந்து வந்த போலீசார் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அண்மையில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவையில் உள்ள நொய்யல் ஆற்றில் தவறி விழுந்து காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
காங்கிரஸின் ஒரே நம்பிக்கையிலும் ஆப்பு.. கேரளா சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! என்ன இப்படி ஆகிடுச்சு -
இனி அலுமினிய பாத்திரத்தில் ISI முத்திரை கட்டாயம்! உங்க சமையலறையில் 99.5% இது முக்கியம்: கோவை பிஐஎஸ் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications