ஒரு "நிர்வாகி" செய்ற காரியமா இது?.. அதுவும் மளிகை கடைக்கார பெண்ணிடம்.. திகைத்து போன கோவை காங்கிரஸ்
: செயின் பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்
கோவை: மளிகைக்கடை வைத்திருக்கும் தனலட்சுமியிடம் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளார் ஒரு காங்கிரஸ் பிரமுகர்.. இந்த சம்பவம்தான் கோவையை அதிர வைத்துள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் கேஜிகே சாலையில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்... மனைவி பெயர் தனலட்சுமி.. 55 வயதாகிறது.
மளிகை கடையில் கணவருக்கு உதவியாக தனலட்சுமியும் ஈடுபட்டு வருவது வழக்கம்.. அப்படித்தான், சம்பவத்தன்று தனலட்சுமி மட்டும் கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்.

மளிகைக்கடை
அப்போது 2 பேர் பைக்கில் வந்துள்ளனர்.. ஒருத்தர் மட்டும் பைக்கில் இருந்து இறங்கி கடைக்கு வந்து, தனலட்சுமியிடம் சிகரெட் கேட்டார்.. தனலட்சுமியும் சிகரெட் எடுத்து அந்த நபரிடம் தந்துள்ளர்.. அப்போது திடீரென, அந்த இளைஞர் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு, தயாராக நின்றிருந்த பைக்கில் ஏறி தப்பிச் சென்றார்.. இதனால் அதிர்ச்சியான தனலட்சுமி, திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார்..

செயின் பறிப்பு
அந்த சத்தம் கேட்டு செல்வகுமாரும், அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து பைக்கை விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் பைக்கில் பறந்து சென்றுவிட்டனர். இதையடுத்து செல்வகுமார் குனியமுத்தூர் போலீஸில் புகார் அளித்தார்... அந்த புகாரின்போரில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.. இளைஞர் செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பி செல்வது பதிவாகியிருந்தது.. மேலும், பைக் நம்பரும் அந்த கேமராவில் பதிவாகி இருந்தது..

கரும்பு கடை
அதனடிப்படையில் தப்பி சென்றவர்களை தேடும் பணி ஆரம்பமானது... இறுதியில் பைக் ஓனரையும் கண்டுபிடித்துவிட்டனர்.. கரும்புக் கடையை சேர்ந்த 17 வயது சிறுவனின் பைக் அது.. இதையடுத்து, சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பைக்கில் வந்த இன்னொருவர் பெயர் பைசல்ரகுமான் என்பது தெரியவந்தது.. அவருக்கு 30 வயதாகிறது.. ஆசாத் நகரை சேர்ந்த அவர், கோவை மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி துணை தலைவர் என்பதும் தெரியவந்தது..

செயின்
இவர்தான் தனலட்சுமியிடம் சிகரெட் கேட்டு, செயினையும் பறித்தவர் என்பது உறுதியானதால், போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்... 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்... வேறு எங்கெல்லாம் இவர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர் என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.. ஒரு காங்கிரஸ் பிரமுகரே அதுவும் முக்கிய பொறுப்பில் உள்ள நபரே, செயின் பறிப்பில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கோவையில் ஏற்படுத்தி உள்ளது.
-
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
கோவை மருதமலை கோயிலில் அதிரடி மாற்றம் – நாளை முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை -
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குத்தாட்டம்.. கேரளா யூடியூபரை டரியலாக்கிய கோவை போலீஸ் -
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்.. கைத்தாங்கலாக தூக்கி வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications