சொன்னதை செய்த திமுக.. கோவை முக்கிய இடத்தில் அசத்தலான மேம்பாலம்
கோவை: கோவை, மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா கோவில் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை இணைந்து இந்தப் பணிகளை தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டம் முழுவதுமே, கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான பாலங்கள் முறையாக கட்டவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. அதேபோல போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் மேம்பாலம் கட்டப்படவில்லை என்ற புகாரும் உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு, கோவைக்கு சில முக்கிய திட்டங்களை அறிவித்தது. கோவை விமானநிலைய விரிவாக்கம், செம்மொழி பூங்கா, கலைஞர் நூலகம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில், திருச்சி சாலை சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இதில் முதல்கட்டமாக சாய்பாபா காலனி சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருகம்பெனி சந்திப்பு வரை சுமார் 1 கி.மீ தொலைவுக்கு (975 மீட்டர்), 16.61 மீட்டர் அகலத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
நான்கு வழி போக்குவரத்தை சமாளிக்கும் வகையில் பாலம் கட்ட உள்ளனர். இதற்காக மத்திய நெடுஞ்சாலைத்துறை முதல்கட்டமாக ரூ.75 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த மேம்பாலத்தில் 23 தூண்கள் மற்றும் 22 தளங்கள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "மொத்தம் மூன்று கட்டங்களாக மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக அஸ்திவாரம் தோண்டி, ஆறு தூண்களை கட்ட உள்ளோம். மேம்பால கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் கேசிபி இன்ப்ரா என்ற நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பணிகளை உரிய நேரத்துக்குள், தரத்துடன் முடிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளோம். இந்த மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சாலையில் போதுமான இடம் இருப்பதால். இப்போதைக்கு போக்குவரத்தையும் மாற்றிவிடவில்லை. இருப்பினும் பணிகள் செல்ல செல்ல, காலை மற்றும் மாலை பீக் ஹவர்ஸ்களில் மட்டும் போக்குவரத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்." என்று கூறியுள்ளனர்.
இது கோவை மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சாய்பாபா கோவில் பகுதியை விட மற்ற இரண்டு மேம்பாலம் கட்டுவது அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை மக்கள், “மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்கனவே கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் மேம்பாலங்கள் உள்ளன. சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் தான் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளது. எனவே அங்கு விரைவில் பாலம் கட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கு விளக்கமளித்துள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், “சிங்காநல்லூர் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு ஒப்புதல் கிடைத்து, நிதியும் ஒதுக்கிவிட்டனர். டெண்டர் பணிகள் நடந்து வருகின்றன. அது முடிந்தவுடன் விரைவில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கும். சரவணம்பட்டியில் மேம்பாலம் அமைய உள்ள சத்தி சாலையில் மெட்ரோ ரயில் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்துள்ளோம். அவர்களுடன் ஆலோசித்து பாலம் கட்டுவது தொடர்பான முடிவு எடுக்கப்படும்." என்று கூறியுள்ளனர்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications