தமிழகத்தில் ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா- கோவை ராசாமணி, காஞ்சி பொன்னையாவுக்கு சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) இல் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் கே ராசாமணி. இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

தூத்துக்குடி மாநகராட்சி கமிஷ்னர் மற்றும் சிறப்பு அலுவலராக பணியாற்றி உள்ளார். இதேபோல் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவராக பணியாற்றி உள்ளார்.

Coimbatore District Collector K Rajamani tested positive for Covid-19 today

அதன் பின்னர் கோவை மாவட்ட ஆட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு பின் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

ஆனால் ஜுலையில் இந்த வேகம் கடுமையாக அதிகரித்தது. சென்னை போன்ற பிற பகுதிகளில் இருந்து வந்தவர்களால் கோவையில் கொரோனா கடுமையாக அதிகரித்தது.

இந்நிலையில் முன்கள வீரராக கோவை மாவட்ட ஆட்சி தலைவர் ராசாமணியே களத்தில் இறங்கி கொரோனா தடுப்பு பணி ஆற்றினார். கொரோனா பாதித்த பல இடங்களுக்கு சென்று பணிகளை செய்து வந்தார்.

இதனால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் சோதனை நடத்தப்பட்டது. இதில் கலெடர் ராசாமணிக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதியானது. இதையடுத்து தன்னை தானே கலெக்டர் ராஜாமணி தனிமைப்படுத்திக்கொண்டார். இப்போது அவர் கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Coimbatore District Collector K Rajamani tested positive for Covid-19 today

காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா

1இதேபோல் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+