கோவை அரசு பஸ்சில் எல்லை மீறிய காதல் ஜோடி.. இளம்பெண்ணை மடியில் உட்கார வைத்து.. முகம் சுளித்த பயணிகள்
கோவை: கோவையில் அரசு பேருந்து ஒன்றில் காதல் ஜோடி ஒன்று முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த வீடியோவில், இளம்பெண்ணை தனது மடியில் அமரவைத்துக்கொண்ட காதலன் முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பொது இடங்களில் சில காதல் ஜோடிகள் செய்யும் செயல்கள் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது. பார்க், பீச், சினிமா தியேட்டர்களில் காதல் ஜோடிகள் சிலர் தங்கள் காதலை வளர்ப்பதும், வரம்பு மீறி அருகில் உள்ளவர்கள் என்ன நினைத்தால் என்ன? என்ற ரீதியில் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் கோவையில் பேருந்தில் ஒரு ஜோடி அத்துமீறியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

காதலை வெளிப்படுத்தும் விதம்
காதல் என்பது புனிதமானது.. காதல் மனிதனை நல்லவனாக மாற்றும் சக்தி கொண்டது. மற்றவரின் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சியை காணும் மனப்பாங்கை உருவாக்கும் சக்தி காதலுக்கு உண்டு. சங்க காலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை காதல் பற்றிய பல கதைகள் உள்ளன.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. காதலர்கள் உலகையே மறந்து விடுவார்கள் என்ற பழமொழியும் உண்டு. காதலைப்பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். புனிதமான இந்த காதலை வெளிப்படுத்தும் விதம், சுற்றியுள்ளவர்களுக்கு சங்கடம் உண்டாக்கும் அளவுக்கு சில நேரங்களில் போய் விடுகிறது.
அரசு பஸ்சில் எல்லை மீறிய காதல் ஜோடி
பொது இடங்களில் கூட தங்களின் தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தி, மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் தற்போதைய கால கட்டத்தில் அடிக்கடி நடைபெறுவதை பார்க்க முடிகிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் கோவையில் ஒரு டவுன் பேருந்தில் நடந்துள்ளது.
கோவையில் அரசு பேருந்து ஒன்றில் காதல் ஜோடி பயணித்துக் கொண்டு இருக்கிறது. பேருந்து முழுக்க பயணிகள் இருந்தாலும் இந்த ஜோடி, எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல், உலகத்தை மறந்து வரம்பு மீறிய செயலில் ஈடுபடுகிறார்கள். இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பது கண்ட இடத்தில் கை வைப்பது என இளைஞரும் இளம்பெண்ணும் செய்யும் செயல்கள் போக போக எல்லை மீறி சென்றன.
சமூக வலைத்தளத்தில் பரவிய வீடியோ
இதனைப் பார்த்த சக பயணிகள் முகம் சுளித்தனர். காதல் ஜோடி அத்துமீறிய செயலில் ஈடுபட்டதை தாங்க முடியாத நபர் ஒருவர் இதை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அதில், இளம்பெண்ணை தனது மடியில் அமரவைத்துக்கொண்ட இளைஞர் முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பேருந்தில் உள்ள பயணிகளும், கொஞ்சமாவது பொது அறிவு வேணாமா.. பேருந்தில் பெரியவர்கள் இருக்கிறார்கள்.. சொந்தக்காரர்கள் யாராவது பார்த்து விடுவார்கள் என்ற பயம் நமக்கெல்லாம் இருக்கும். ஆனால் இதனை பற்றி கிஞ்சித்தும் கவலையின்றி இப்படி பண்ணுகிறார்களே.. என்று பயணிகள் பேசிக்கொள்வதும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக நெட்டிசன்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறும் போது, "காதலிப்பது தனிமனித சுதந்திரம்.. அதனால் மேலோட்டமாக பார்த்தால் தவறு இல்லை.. ஆனால் பொது பேருந்தில் கணவன், மனைவியே இப்படி உட்காரும் கலாசாரம் இல்லாததால் இவ்வாறு பயணிப்பது தப்புதான்.
இன்றைய 2கே கிட்ஸ்கள்
குழந்தை வேறு பக்கத்தில் உள்ளது. டாக்சி புக் பண்ணி எப்படி வேணா போகலாம்" என்று பதிவிட்டுள்ளார். சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இதுபோல நிகழ்வுகள் முன்பெல்லாம் நடப்பதாக கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது கோவை வரை வந்துவிட்டது. இன்றைய 2 கே கிட்ஸ்கள் பலருக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை..
எதைப்பற்றியும் அக்கறை இல்லை என்று பதிவிட்டுள்ளார். சில நெட்டிசன்கள் கூறுகையில், இந்த வீடியோ காட்சிகளை வைத்து அந்த காதல் ஜோடிக்கு போலீசார் உரிய அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும். பொது இடங்களில் இப்படி அநாகரிகமாக நடப்பது அப்போதுதான் தடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்?












Click it and Unblock the Notifications