கோவை மத்திய அரசு பணி தேர்வில் ஆள்மாறாட்டம்.. ஹரியானாவின் 4 பேர் கைது.. சிக்கியது எப்படி? சுவாரசியம்
கோவையில் மத்திய அரசின் வனமரபியல் மற்றும் மர பெருக்க நிறுவனத்தில் பன்முக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது.
கோவை: கோவை-மேட்டுபாளையம் ரோட்டில் வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனத்தில் பன்முக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ஹரியானாவின் 4 பேரை கோவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இவர்கள் எப்படி சிக்கினர்? என்பதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் கோவையில் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. காடு வளர்ப்பு மற்றும் வனப்பரப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் இங்கு காலியாக உள்ள பன்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆன்லைனில் நாடு முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் விண்ணப்பம் செய்தனர்.

எழுத்து தேர்வு
இதையடுத்து கடந்த மாதம் 4ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. போட்டோ மற்றும் கைரேகை பதிவு செய்த பிறகு விண்ணப்பம் செய்தவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்க்காணலுக்கு பிறகு பணியமர்த்தப்படுவார்கள். இந்நிலையில் தான் நேர்முகத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. அப்போது ஹரியானாவை சேர்ந்த 4 பேர் மீது சந்தேகம் எழுந்தது.

ஆள்மாறாட்டம் - 4 பேர் கைது
இதையடுத்து வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குனிக்கண்ணன் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஆர் அமித் குமார் (வயது 30), எஸ் அமித் குமார் (26), அமித்(23), சுலைமான்(25) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

4 பிரிவுகளில் வழக்கு
இவர்கள் மீது மோசடி, ஆள்மாறாட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆள்மாறாட்டத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாகவும் போலீசார் தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் இவர்கள் 4 பேரும் எப்படி பிடிபட்டனர் என்ற சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிக்கியது எப்படி?
அதாவது ஆள்மாறாட்டம் செய்து கைதான 4 பேரும் பணிக்கான எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இருப்பினும் ஆங்கிலம் அவர்களுக்கு சரியாக தெரியவில்லை. மேலும் தேர்வு எழுதியவர்களின் கைரேகை பதிவும், தற்போது நேர்க்காணலுக்கு வந்தவர்களின் கைரேகை பதிவுகளும் ஒன்றாக பொருந்தவில்லை. இதனால் ஆள்மாறாட்டம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள்












Click it and Unblock the Notifications