"ஹை அலர்ட்.." கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. களமிறங்கும் சுகாதார துறை.. அதிரடி ஆக்ஷன்
கொரோனா பாதிப்பால் தொழில் நகரான கோவை பல விஷயங்களை இழந்துள்ளது.
கோவை: கடந்த பல மாதங்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே கோவையில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது கோவை மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020இல் இந்தியாவில் நுழைந்த கொரோனா வைரஸ் அதன் பிறகு நம்மை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக நாம் இரண்டு ஆண்டுகளை முழுமையாக இழந்தோம்.
குறிப்பாக ஊரடங்கு உள்ளிட்ட பல காரணங்களால் ஊரே முடங்கியது. அதன் பிறகு வேக்சின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போது தான் நாம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறோம்.

கொரோனா
தமிழ்நாட்டிலும் கடந்த 2020இல் கொரோனா பரவல் முதல் அலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் இந்தியா முழுக்க முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்த நிலையில், மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அடுத்த அலை ஏற்பட்டது. இப்படி மொத்தம் மூன்று கொரோனா அலைகள் ஏற்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு மோசமாகவே இருந்தது. மனித இழப்புகள் ஒரு பக்கம் என்றால்.. பொருளாதார பாதிப்புகளும் மற்றொரு பக்கம் மிக மோசமாகவே இருந்தது.

கோவை
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் தான் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. சென்னைக்கு அடுத்து தொழில் நகரான கோவையில் வைரஸ் பாதிப்பு மோசமாக இருந்தது. குறிப்பாக, கொரோனாவில் பிந்தைய காலங்களில் பல நாட்களுக்குச் சென்னையில் வைரஸ் பாதிப்பு குறைந்த போதிலும், கோவையில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருந்தது. இதனால் பல நாட்களுக்குத் தொழில் நகரான கோவையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது.

நடவடிக்கை
அதன் பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்தது. கோவை மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் கோவையில் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் பின்னரே கோவையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருந்த நிலையில், இப்போது தொழில் நகரான கோவையில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது.

உயர்வு
இதனால் கோவை மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அங்கு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மீண்டும் சுகாதாரத்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், மக்கள் கூடும் இடங்களில் பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தோருக்கு கொரோனா டெஸ்டிங் நடத்தப்பட்டது.

அதிகரிப்பு
மொத்தம் 462 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குக் கோவையில் 13 பேருக்கு கொரோனா உறுதியானது. இது பார்க்கக் குறைவு போல இருந்தாலும் கூட, கடந்த காலங்களில் கொரோனா அலைகள் ஆரம்பிக்கும் போது இப்படித்தான் மெல்ல வைரஸ் பாதிப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. கோவைக்கு அடுத்து சென்னையில் 8 பேருக்கு உட்படத் தமிழகம் முழுக்க 44 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது சுமார் 269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கவலை
தொழில் நகரான கோவையில் கொரோனாவால் ஏற்கனவே பல தொழில்கள் நஷ்டமடைந்துள்ளன. இதற்கிடையே கோவையில் இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், இது கோவை மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா இப்போது மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் மாஸ்க் அணிவது. கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications